தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் மூன்றாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடியின் பல பகுதிகளில் உயிரிழந்தோரின் புகைப்
படங்களுக்கு மலர்தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்ததற்கு, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். படம்: தமிழக ஊடகம்

