தஞ்சாவூர்: கோவாக்சின் தடுப்பூசி கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால், தஞ்சை மாவட்டத்தின் பல இடங்களில் இரண்டாவது தடுப்பூசி போடமுடியாமல், பொதுமக்கள் கடந்த சில நாட்களாகத் தவித்து வருகின்றனர்.
தஞ்சாவூரில் தற்போது ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா கிருமித்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மாவட்டத்தில் கிட்டத்தட்ட 1,79,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தற்போது, அங்கு கோவிஷீல்டு ஊசிகள் மட்டுமே போடப் படுகின்றன. கோவாக்சின் ஊசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், விரைவில் கோவாக்சின் மருந்து கிடைத்துவிடும் என்றும் உடனடியாக இரண்டாவது தடுப்பூசிகள் போடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மதுரையில் 18 முதல் 45 வயது நபர்களுக்கு போடு
வதற்காக 38,000 கோவிஷீல்டு ஊசிகளும், 5,000 கோவாக்சின் ஊசிகளும் வந்து சேர்ந்தாலும், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படாததால் அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கவில்லை. அதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.