தூத்துக்குடி: கொேரானா ஊரடங்கு காரணமாக ஏழை, எளியோர், ஆதரவற்ற மக்கள், சாலை யோரங்களில் திரிபவர்கள் என பலரும் உணவு கிைடக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இவர்களுக்கு உதவும் வகையில், கோவில்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற பழக்கடைக்காரர் வாழைப்பழங்களை இலவசமாக வழங்கி மக்களின் பசிப்பிணி போக்கி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டியில் உள்ள கடலையூரில் பழக்கடை வைத்திருக்கும் முத்துப்பாண்டி, பூட்டிக் கிடக்கும் தனது கடையின் முன்பு தினமும் ஐந்து வாழைத்தார்களைத் தொங்க விட்டு, "பசி எடுத்தால் எடுத்துச் சாப்பிடுங்கள், பழம் இலவசம். ஆனால், வீணாக்கவேண்டாம்," என்ற வாசகத்தையும் கரும்பலகை யில் எழுதி வைத்துள்ளார்.
முகம் தெரியாத பழக்கடைக்காரரின் மனித நேயத்தை மக்கள் பாராட்டிச் செல்கின்றனர்.
இதேவழியில், "பசித்தால் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்," என தள்ளுவண்டியில் உணவுப் பொட்டலத்துடன் விளம்பரப் பதாகையும் வைத்து ஏழைகளின் பசியை பேராவூரணி இளைஞர்கள் சிலரும் போக்கி வருகின்றனர்.
கார்த்திகேயன், நிமல், பிரபாகரன், ரமேஷ் ஆகிய இளைஞர்கள் கூறுகையில், "பொது ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோர், கூலி வேலை செய்ேவார், முதியவர்கள் பயன்பெறும் வகையில் தினமும் 100 பேருக்கு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை தள்ளுவண்டியில் வைத்து வழங்கி வருகிறோம். பசியுள்ளோர் உணவுப் பொட்டலத்தை எடுத்துக்கொள்ளலாம்," என்கின்றனர்.

