திருப்பெரும்புதூர்: நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்றத் தலைவராக திருப்பெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மூத்தவர்கள் என்ற முறையில் பலரும் அந்தப் பதவிக்குப் போட்டி யிட்டதே இத்தாமதத்திற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றியைப் பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைத்துள்ளது.
இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 25 தொகுதி களில் 18ல் வெற்றிபெற்றது.
அதிமுக, பாமக, பாஜக, கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சியிலும் சட்டமன்றத் தலைவர், துணைத் தலைவர், கொறடா பதவிகளை வகிப்பவர்களின் பெயர்கள் அறி விக்கப்பட்டுவிட்டன. ஆனால், காங்கிரஸ் கட்சி மட்டும் சட்டமன்றத் தலைவரைத் தேர்வு செய்யமுடியாமல் திணறி வந்தது.
இந்நிலையில், ஒருவழியாக இப்போது தலைவர், துணைத் தலை வர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், "அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலோடு தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வும் துணைத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் எம்எல்ஏவும் நியமிக்கப்பட்டுள்ளனர்," என்று தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை 2006-2011ல் சட்டப்பேரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக இருந்தார். 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருப்ெபரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர், அண்மையில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

