சென்னை: சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்த 1,400 உயிர்வாயு உருளைகள் மற்றும் மருத்துவ உப கரணங்களை பல்வேறு மாவட்டங் களுக்கு நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அனுப்பிவைத்தார்.
இந்த எரிவாயு உருளைகள் விசாகப்பட்டினத்திற்கு முதலில் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சாலைமார்க்கமாக சென்னை தலை மைச் செயலகம் வந்து சேர்ந்தன.
அதன்பின்னர், இந்த 1,400 உயிர்வாயு உருளைகளும் 10 வாகனங்கள் மூலம் 18 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்படி கரூர், தருமபுரி, நீலகிரி, நாமக்கல், நாகை, திருவா ரூர், தேனி, திண்டுக்கல், கன்னியா குமரி, ராமநாதபுரம், விருதுநகர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 75 உயிர்வாயு உருளைகளும் சிவகங்கை, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டத்திற்கு தலா 100 உருளைகளும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 50 உருளைகளும் என ஆகமொத்தம் 1,400 உயிர்வாயு உருளைகளும் இவற்றை முறைப் படுத்தும் கருவிகளும் கொரோனா சிகிச்சை பயன்பாட்டிற்காக வாகனங்களில் அனுப்பிவைக்கப்பட்டன.
கிருமிப் பரவல் பாதிப்புக்கேற்ப, கொரோனா நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டங்களின் தேவைக் கேற்ப இந்த உயிர்வாயு உருளைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
அதிக பாதிப்புள்ள மாவட்டங் களுக்கு அதிகமாகவும் குறைந்த பாதிப்புள்ள மாவட்டங்களுக்கு குறைவாகவும் இந்த உயிர்வாயு உருளைகள் அனுப்பப்பட்டதாக நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தி தெரிவித்தது.
சிப்காட் நிறுவனத்தின் மூலம் சிங்கப்பூர், மத்தியக் கிழக்கு நாடுகள், துபாயில் இருந்து 1,915 உயிர்வாயு உருளைகள், 2,380 உயிர்வாயு செறிவூட்டிகள், 3,250 மருத்துவ உயிர்வாயு அளவீட்டுக் கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் மொத்தம் 40.71 கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதி செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்ததாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

