சென்னை: தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதத்தின் தாக்கம் முதல் அலையில் இருந்ததைவிடவும் இப்போதைய இரண்டாம் அலையில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.
கடந்த 11 நாள்களில் மட்டும் 4,284 போ் உயிரிழந்தது அதற்கு சான்றாகவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா முதல் அலையில் தமிழகத்தின் இறப்பு விகிதம் 0.8% ஆகவும் தற்போது 1.5%ஆகவும் அதிகரித்துள்ளது. அதன்படி கணக்கிட்டால், இரண்டாம் அலையில் ஏறத்தாழ இருமடங்கு இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு மே 25ஆம் தேதியன்று மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 10 என்ற எண்ணிக் கையில்தான் இருந்தது. ஓராண்டுக்குப் பிறகு நேற்று முன்தினம் மே 25ல் அந்த எண்ணிக்கை 468ஆக உயா்ந்துள்ளது.
இரண்டாம் அலை தொடங்கிய கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை ஏறத்தாழ 8,000 போ் கொரோனாவுக்கு பலியாகியிருப்பதாக சுகாதாரத் துறைத் தகவல்களும் தெரிவித்துள்ளன. அதில் பெரும்பாலானோா் 45 வயதுக்குட்பட்டவா்கள், எந்த இணை நோயும் இல்லாதவா்கள் என்பதும் அதிர்ச்சிக்குரிய தகவல்.
இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த கடந்த முறை பின்பற்றியதைப் போன்றே சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிகிச்சை முறைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா கிருமியானது, இரண்டாம் அலையில் வீரியமிக்கதாக உருமாறியுள்ளது. அதன் விளைவாகவே இறப்போரின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி இறந்தவா்கள் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமலும் பலா் உயிரிழந்துள்ளனர்.

