கறுப்புப் பூஞ்சை நோய்க்கு வேலூரில் ஒருவர் மரணம்

கறுப்புப் பூஞ்சை நோய்க்கு வேலூரில் ஒருவர் மரணம்

1 mins read
e00f37ae-d14e-4f76-8b0c-a8dc00eba1eb
-

வேலூர்: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மிப் பர­வ­லைத் தொடர்ந்து, கறுப்புப் பூஞ்சை நோயா­லும் மக்­கள் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

வேலூர் மாவட்­டம், சேண்­பாக்­கம் பகு­தி­யைச் சேர்ந்தவர் முரு­கா­னந்­தம், 44. கிருமி பாதிப்பில் இருந்து அண்மையில்தான் மீண்டார்.

இதைத்தொடர்ந்து மீண்­டும் அவருக்கு உடல்­ந­லக் குறைவு ஏற்­பட, பரிசோதனையில் கறுப்­புப் பூஞ்சை நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்டது. அதன் பின்னர், அவ­ரது இடது கண்­ணும் அறுவை சிகிச்சை மூலம் அகற்­றப்­பட்­டது.

இந்நிலையில், தீவிர சிகிச்­சைப் பிரி­வில் தொடர் சிகிச்சை பெற்று வந்த முரு­கா­னந்­தம் சிகிச்சை பல­ன­ளிக்­கா­மல் உயி­ரி­ழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் சிஎம்சி மருத்­து­வ­ம­னை­யில் 40 பேர் கறுப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெறு­கின்றனர். இவர்­களில் 13 பேர் கொரோ­னா­வில் இருந்து மீண்­ட­வர்­கள் ஆவர்.

இதற்­கி­டையே, இந்த கறுப்புப் பூஞ்சை நோயைக் கட்­டுப்­ப­டுத்­து­வது குறித்து இன்று மருத்­துவ வல்­லு­நர்­க­ளு­டன் சுகா­தா­ரத்­துறை அதிகாரிகள் ஆலோ­சனை நடத்த உள்­ள­தா­க­ சுகா­தா­ரத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.