முதல்வர்: ஆறு மாவட்டங்களில் கிருமித் தாக்கம் குறையவில்லை

முதல்வர்: ஆறு மாவட்டங்களில் கிருமித் தாக்கம் குறையவில்லை

2 mins read
ddfacc3e-bbd9-4a98-a1a8-db2f7283a3be
-

சென்னை: கோவை, திருப்­பூர் உள்­ளிட்ட ஆறு மாவட்­டங்­களில் கொரோனா பரவலின் தாக்­கம் இன்­னும் ஒரு கட்­டுக்­குள் வர­வில்லை என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கூறி­யுள்­ளார்.

தமி­ழ­கத்­தில் அம­லில் உள்ள ஒரு வார தளர்­வற்ற முழு ஊர­டங்கு வரும் திங்­கட்­கி­ழ­மை­யு­டன் முடி­வ­டைய உள்ள நிலை­யில், இந்த ஊர­டங்கு தொடர்ந்து நீட்­டிக்­கப் படுமா? அல்­லது தளர்­வு­டன் கூடிய ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­ப­டுமா? என்­பது தொடர்­பாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தலை­மை­யில் நேற்று ஆலோ­ச­னைக் கூட்­டம் நடைபெற்­றது.

சென்னை தலை­மைச் செய லகத்­தில் நடை­பெற்ற கூட்டத்தில் தலைமைச் செய­லா­ளர், சுகா­தா­ரத்­து­றைச் செய­லா­ளர், வரு­வாய்த் துறைச் செய­லா­ளர் உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர்.

தளர்­வில்லா ஊர­டங்கை நீட்­டிப்­பது தொடர்­பா­க­வும் ஏதே­னும் தளர்­வு­கள் அளிக்­க­லாமா என்­பது குறித்­தும் முதல்­வர் அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னார்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்­சி­யர்­க­ளு­ட­னும் மருத்­துவ வல்­லு­நர் குழு, சட்­ட­மன்ற உறுப்­பி­னர் குழு­வுடனும் முதல்­வர் ஆலோ­சிக்க உள்ளதாகத் தெரி­கிறது.

இந்நிலையில், ஊர­டங்கு நீட்­டிப்பு தொடர்­பான அறி­விப்பு இன்னும் ஓரிரு நாள்­களில் வெளி­யா­கும் என்­றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கிருமி பாதிப்பு அதி­கமுள்ள கோவை, திருப்­பூர், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு ஆகிய ஆறு மாவட்ட ஆட்­சி­யர்­க­ளு­டனும் காணொளி வாயி­லாக முதல்­வர் ஆலோசித்தார்.

அப்போது, கிருமிப் பர­வல் அதிக முள்ள பகு­தி­க­ளைக் கண்­காணித்து, அங்கு போதிய அளவில் பரி­சோ­த­னையை மேற்­கொள்ள உத்­த­ர­விட்­டார். கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகள வில் தடுப்பூசி போடப்பட்டுள்ள தாகவும் மற்ற நான்கு மாவட்டங் களில் 18 முதல் 44 வயதுடையோரை தடுப்பூசி போடச்செய்யவும் ஆட்சி யர்களிடம் முதல்வர் கூறினார்.