சென்னை: தமிழகத்தில் கொரோனா முதல் அலையைக் காட்டிலும் இப்போதைய இரண்டாம் அலை காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த வியா ழனன்று மட்டும் கிருமி பாதிப்பால் 474 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்திலும் தலைநகர் சென்னையிலும் கிருமி பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.
மாநிலத்தில் கடந்த புதனன்று கிருமி பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,764 ஆக இருந்த நிலையில், வியாழனன்று இந்த எண்ணிக்கை 33,361ஆக மேலும் குறைந்தது.
சென்னையிலும் இந்தப் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.
எனினும், தொடர்ந்து இரண்டா வது நாளாக சென்னையை விடவும் கோவையில் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டி ருப்பதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேற்கு மாவட்டமான கோவை யில் 4,734 பேருக்கு தொற்று உறுதி யானது. இது சென்னையில் பதி வான 2,779 பேரை விடவும் ஏறத் தாழ இரு மடங்கு அதிகமாகும்.
இம்மாதம் 10ஆம் தேதி முதல் கோவையில் தொற்று எண்ணிக்கை வேகமெடுத்து வருகிறது.
கோவையில் 37,488 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,135 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, கொரோனா கிருமியானது இரண்டாம் அலையில் வீரியமிக்கதாக உருமாறியுள்ளது. அதன் விளைவாகவே இறப்போ ரின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ள தாக மருத்துவ நிபுணர்கள் தெரி வித்துள்ளனா்.
சிகிச்சை பலனின்றி இறந்தவர் கள் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமலும் பலா் உயிரிழந் துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாள் களாகவே கொரோனாவால் இறப்ப வர்களில் எந்த இணைநோயும் இல்லாமல் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளதாகஅதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நோயாளிகள் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறாதது, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாதது, தகுந்த மருந்துகள் கிடைக்காதது ஆகியவற்றை உயிரிழப்புக்கான காரணங்களாக மருத்துவத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக சென்னையில் 79, செங்கல்பட்டில் 52, திருப்பூரில் 34, கோவையில் 32, சேலத்தில் 30 பேரும் உயிரிழந்துள்ளனர்.

