கொரோனா நோயாளிகளுக்கு வீடு தேடி வரும் உணவு

கொரோனா நோயாளிகளுக்கு வீடு தேடி வரும் உணவு

1 mins read
3e737a95-3efd-4861-babc-47902440f738
-

சென்னை: கிருமி பாதிப்பு கார­ண­மாக வீடு­களில் தனி­மைப்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கும் கொரோனா நோயா­ளி­க­ளுக்கு மூன்று வேளை யும் உணவை வீடு­க­ளுக்கே கொண்டு சென்று வழங்­கும் திட்­டத்தை சென்னை சைதாப்­பேட்­டை­யில் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தொடங்கி வைத்­தார்.

ஏற்­கெ­னவே அரசு மருத்­து­வ­மனைகளில் உள்ள அனை­வ­ருக்­கும் மூன்று வேளை­யும் இல­வச உணவு வழங்­கும் திட்­டத்தை அமைச்­சர் தொடங்கி வைத்த நிலை­யில், இப்­போது வீட்­டி­லி­ருக்­கும் கொரோனா நோயா­ளி­க­ளுக்­கும் இல­வ­ச­மாக உணவு அளிக்­கப்­படும் என்று கூறி­யுள்­ளார்.

இத்­திட்­டம் குறித்து அமைச்­சர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது, "வீட்­டுத் தனி­மை­யில் இருக்­கும் கொரோனா நோயா­ளி­க­ளுக்கு என்றே உணவு தயா­ரிப்­ப­தற்­காக தனி­யாக சமை­யல் கூடத்­திற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

"அங்கு தயா­ரிக்­கப்­படும் உணவை 100 களப்­ப­ணி­யா­ளர்­கள் வீடு தேடிச் சென்று விநி­யோ­கிப் பார்­கள். காலை­யில் இட்லி, பொங் கல், கிச்­ச­டி­யும் மதி­யம் சாப்­பாடு, இரவு 'டிபன்' என மூன்று வேளை­யும் இல­வ­ச­மாக வழங்­கப்­படும்.

"இந்த மனி­த­நேய உதவி கொரோனா கட்­டுப்­படும் வரை தொட­ரும்," என்றார் அமைச்­சர்.