கிறிஸ்துவ இல்லத்தில் இறந்த இந்து மூதாட்டிக்கு முஸ்லிம்கள் இறுதிச் சடங்கு

கிறிஸ்துவ இல்லத்தில் இறந்த இந்து மூதாட்டிக்கு முஸ்லிம்கள் இறுதிச் சடங்கு

1 mins read
2b0c5f30-fd56-4344-998e-67bc0d24ca13
இறந்த மூதாட்டிக்கு இறுதிச் சடங்குகள் செய்து, மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக இருப்பவர்கள். படம்: ஊடகம் -

ஈரோடு: ஈரோட்­டில் இந்து, முஸ் லிம், கிறிஸ்­து­வர்­கள் தங்­க­ளது மத நல்­லி­ணக்­கப் பண்பு காரண மாக மற்­ற­வர்­க­ளுக்கு முன்னு தார­ண­மாகி உள்­ள­னர்.

கிறிஸ்­துவ முதி­யோர் இல்­லத் தில் கொரோனா பாதிப்­பால் உயி­ரி­ழந்த இந்து மூதாட்­டிக்கு முஸ்­லிம் அன்­பர்­கள் இறு­திச்­ச­டங்கு செய்து மத நல்லிணக்­கத்­துக்கு உதா­ர­ண­மா­கத் திகழ்ந்­துள்­ள­னர்.

ஈரோடு மாவட்­டம், திண்­ட­லில் 'லிட்­டில் சிஸ்­டர்ஸ்' கிறிஸ்­துவ முதி­யோர் இல்­லத்­துக்கு, ஈரோடு தெற்கு மாவட்ட காங்­கி­ரஸ் தலை வர் 'மக்­கள்' ராஜன் தின­மும் உணவு வழங்கி வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் வழக்­கம்­போல் 'மக்­கள்' ராஜன் உணவு வழங்­கச்­சென்­ற­போது, கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்ட ஆண்­டாள், 75, இறந்து காணப் பட்­டார். உற­வி­னர்­கள் இல்­லா­த­தால் அவ­ரது உடலை இந்து மதப்­படி எரி­யூட்­டும்­படி இல்ல நிர்­வா­கி­கள் கேட்­டுக்­கொண்­ட­னர்.

இதை­ய­டுத்து, 'பாப்­பு­லர் பிரண்ட் ஆப் இந்­தியா' அமைப்­பைச் சேர்ந்த பாட்ஷா, எஸ்­டி­பிஐ கட்­சி­யின் மாவட்­டத் தலை­வர் லுக்­மான் ஆகி­யோ­ரின் உத­வி­யுடன் மின் மயா­னத்­தில் சடங்­கு­கள் செய்து, மூதாட்­டி­யின் உடல் எரி­யூட்­டப்­பட்­டது.

இந்து மதத்தைச் சேர்ந்த ஆண்டாளை, அவரது இறுதிக்காலம் வரை கிறிஸ்துவ சகோதரிகள் பராமரித்தனர். அவரது இறுதி நிகழ்வு, சடங்குகளை முஸ்லிம் சகோதரர்கள் செய்தனர். இதர ஏற்பாடுகளை நாங்கள் செய்தோம்.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் 'மக்கள்' ராஜன்