அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை புகார்

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை புகார்

2 mins read
335b487b-7d0e-4038-950b-cbd73dab2689
மணிகண்டனுடன் தான் ஒன்றாக இருக்கும் இந்தப் புகைப்படத்தையும் நடிகை சாந்தினி செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. படம்: ஊடகம் -

சென்னை அதி­முக முன்­னாள் அமைச்­சர் மணி­கண்­டன் தன்­னைத் திரு­ம­ணம் செய்து கொள்­வ­தாக ஆசை காட்டி, மோசம் செய்து விட்­ட­தாக 'நாடோ­டி­கள்' திரைப்­பட நடிகை சாந்­தினி சென்னை காவல் ஆணை­யர் அலு­வ­ல­கத்­தில் புகார் அளித்­துள்­ளார்.

சென்னை பெசன்ட் நக­ரில் வசித்து வரு­ம் சாந்­தினி, 36, 'நாடோ­டி­கள்' உள்­பட ஐந்து தமிழ்ப் படங்­களில் நடித்­துள்­ளார்.

மத்­திய குற்­றப்­பி­ரிவு துணை ஆணை­யர் நாக­ஜோ­தி­யி­டம் சாந்­தினி அளித்­துள்ள மனு­வில், "நான் மலே­சிய குடி­யு­ரிமை பெற்ற, திரு­ம­ண­மா­காத பெண். மலே­சிய நாட்­டின் சுற்­றுலா வளர்ச்­சிக் கழ­கத்­தில் பணி­பு­ரிந்து வந்­த­போது அடிக்­கடி நான் சென்னை வரு வேன். அப்­போது அமைச்­ச­ராக இருந்த மணி­கண்­ட­னு­டன் எனக்­குப் பழக்­கம் ஏற்­பட்­டது.

"என்னை விரும்­பு­வ­தா­க­வும் திரு­ம­ணம் செய்துகொள்­வ­தா­க­வும் அவர் உறுதி அளித்­தார்.

"அவ­ரது பேச்சை நம்பி கண­வன்-மனை­வி­யாக வாழ்ந்­தோம். மூன்று முறை கரு­வை­யும் கலைத் துள்­ளேன்.

"தற்­போது திரு­ம­ணம் செய்யு மாறு கேட்­டால், என் புகைப்­ப­டங்­களை சமூக வலைத் தளங்­களில் வெளி­யிட்டு விடு­வ­தாக பய­மு­றுத்து கிறார்.

"அவர் மீது சட்­ட­பூர்வ நட வடிக்கை எடுத்து, எனது புகைப் படங்­களை மீட்­டுத்­தர வேண்­டும்," என்று கூறி­யுள்­ளார்.

இந்த விவ­கா­ரம் தொடர்­பாக நியூஸ் 18 ஊட­கம் மணி­கண்­டனைத் தொடர்பு கொண்­ட­போது, "மூன்று வரு­டங்­க­ளாக அமைச்­ச­ராக இருந்­துள்­ளேன். என் மீது ஒரு சிறிய புகார்கூட கிடை­யாது.

"ஒரு புகைப்படத்தை வைத்­துக்­கொண்டு, ஆட்­சி­யெல்­லாம் முடிந்த பின்­னர் இப்படி வந்து மிரட்­டு­கிறார்­கள். ஆட்­சி­யில் இருக்­கும்­போது பேசி­யி­ருந்­தால்கூட என்­ன­வென்று கேட்­டி­ருக்­க­லாம். யாரோ பணம் பறிக்­கும் கும்­பல் பின்­ன­ணி­யில் இருந்து கொண்டு இந்தச் சதி வேலையில் இறங்கியுள்ளது," எனக் கூறியுள்ளார்.