சென்னை: 'மியூகோர்மைகோசிஸ்' என அழைக்கப்படும் கறுப்புப் பூஞ்சை நோய் காரணமாக இதுவரை ஏறக்குறைய 400 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ெதரிவித்துள்ளார்.
இந்த 400 பேரில் அதிகபட்சமாக சென்னையில் 111 பேரும் அதற்கு அடுத்தபடியாக வேலூரில் 74 பேரும் கோவையில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதன் காரணமாக அரசு, தனி யாா் மருத்துவமனைகளில் அதற்கென தனி வாா்டுகளை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கறுப்புப் பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்தவும் இந்நோய் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கவும் 13 போ் கொண்ட மருத்துவக் குழுவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைத்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு, டாக்டர் மோகன் காமேஷ்வர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழகத்தில் கறுப்புப் பூஞ்சை நோயால் 400 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அவரது இறப்புக்குக்கூட நுரையீரல் பாதிப்பே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
"கறுப்புப் பூஞ்சை நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் தாராளமாகக் கிடைக்கின்றன.
"மூக்கில் இருந்து கறுப்பு நிறத்தில் திரவம் அல்லது ரத்தம் வெளியேறினால் இது கறுப்புப் பூஞ்சை நோயின் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்," என்று கூறிய அவர்கள், இது தொற்றும் நோய் அல்ல என்றனர்.
கறுப்புப் பூஞ்சை தாக்குவதற்கு நீண்டநாள்களாக ஊக்க மருந்து சிகிச்சை பெறுவது, நோய் எதிர்ப்புச் சக்தி மருந்தை அதிககாலம் உட்கொள்வது, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்காதது போன்ற சில காரணங்களும் உள் ளன என்றும் அவர்கள் கூறினர்.

