கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க 'கிருமி நாசினி மழை'

கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க 'கிருமி நாசினி மழை'

1 mins read
a03b7874-8b98-4bf8-940e-82db529b1680
-

பெங்களூரு: பெங்­க­ளூரு நக­ரில் மக்­கள் நெருக்­கம் அதி­க­மாக உள்ள பகு­தி­களில் கிரு­மித்­தொற்று தடுப்பு நட­வ­டிக்­கை­யாக வானி­லி­ருந்து கிரு­மி­நா­சினி திர­வம் தெளிக்­கும் நட­வ­டிக்கை தொடங்கி உள்­ளது. அமெ­ரிக்­கா­வின் 'சாம்­பி­யன் ஸ்கௌட்' ரக சிறு விமா­னம் இந்­தப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கிறது. சனிக்­

கி­ழமை இந்த கிருமி நாசினி தெளிப்பு விமா­னத்தை கர்­நா­டக வரு­வாய்த் துறை அமைச்­சர் ஆர். அசோக் தொடங்கி வைத்­தார். மூன்று நாட்­க­ளுக்கு இவ்­வி­மா­னம் கிருமி நாசினி திர­வம் தெளிக்­கும் பணி­யைத் தொட­ரும்.

இவ்­வி­மா­னத்­தில் 300 லிட்­டர் கிருமி நாசினி நிரப்­பப்­ப­டு­கிறது. ஒரு மணி நேரத்­தில் சுமார் 300 ஹெக்­டர் நிலப்­ப­ரப்­பின் மீது கிருமி நாசி­னி மழையைப் பொழியும் ஆற்­றல் கொண்­டது இவ்­வி­மா­னம். வானி­லி­ருந்து கிருமி நாசினி தெளிக்­கப்

­ப­டு­வ­தால் மக்­க­ளுக்கு எவ்­வித சுகா­தா­ரக் குறை­வும் ஏற்­ப­டாது என இப்­ப­ணியை முன்­னின்று நடத்­தும் ஏரோ எல்­எல்பி நிறு­வ­னத்­தின் முரளி ராம­கி­ருஷ்­ணா கூறி­னார். படம்: இபிஏ