சென்னை: பிரபல தடகள பயிற்றுநர் நாகராஜனை 12 நாட்கள் விசாரணைக் காவலில் வைக்க உத்தர விடப்பட்டுள்ளது. இவர் மீது இரு நாட்களுக்கு முன் பாலியல் புகார்கள் கொடுக்கப்பட்டன. மத்திய அரசின் 'ஜிஎஸ்டி' வரி கண்காணிப்பாளராகப் பணிபுரியும் இவர், 'பிரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற பெயரில் தட
களப் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். அங்கு இவரிடம் வீராங்கனைகள் பலர் தடகளப்பயிற்சி பெற்றுவந்தனர். பயிற்சியளிக்கும் போது வீராங்கனைகளைப் பாலியல் ரீதியாக நாகராஜன், 59, (படம்) சீண்டி வந்திருக்கிறார். பணபலம் படைத்தவர்களை விடுத்து ஏழைப்பெண்களைக் குறிவைத்து பாலியல் சீண்டல் செய்து வந்த இவர், 17 வயது வரையிலான சிறுமிகளைக் குறிவைத்திருக்கிறார். இவரிடம் பயிற்சிபெற்ற பெண் ஒருவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். 'பிசியோதெரபி' பயிற்சி அளிப்பதாகக் கூறி நாகராஜன் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் 20க்கு மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக வும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், நாகராஜன் மீது 'போக்சோ' உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்தனர். போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நாகராஜனிடம் விசா ரணை நடத்திய நீதிபதி முகமது ஃபாரூக், 12 நாள் நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து நாகராஜன் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராஜகோபாலன் மீது
ஆறு மாணவிகள் புகார்
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த 24ஆம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அண்மை யில் மேலும் இரு மாணவிகள் ராஜகோபாலனுக்கு எதிராக புகார் கொடுத்தனர். இந்நிலையில், தற்போது மேலும் மூன்று மாணவிகள் அவருக்கு எதிராகப் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இது வரை ஆறு மாணவிகள் புகார் அளித்துள்ளதால் விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது.
பயிற்சிக்கு வந்த 17 வயது சிறுமிகளைக் குறிவைத்து பாலியல் சீண்டல்

