திருப்பூர்: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "தமிழகத்துக்கு 95.50 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 84.50 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் 3.5 கோடி தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் ஜூன் 5ஆம் தேதி முடிவாக உள்ளது. செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டிற்குக் கொண்டு வர மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் உற்பத்தி துவங்கும். அதன்பின், பிற மாநிலங்களுக்கும் இங்கிருந்து தடுப்பூசி வழங்கும் நிலை ஏற்படும்," என்றார்.
தடுப்பூசி தயாரிக்க தமிழகம் முயற்சி
1 mins read
-

