சென்னையில் பெண்கள் உள்ளிட்ட கும்பல் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியது

சென்னையில் பெண்கள் உள்ளிட்ட கும்பல் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியது

1 mins read
c5c681aa-93c1-41e6-ad03-9feeb63c87c1
-

சென்னை: ஓட்­டேரி எஸ்.எஸ். புரத்­தில் சேகர் என்­ப­வர் அதே பகு­தி­யில் உள்ள தமது வீட்­டில் மது போத்­தல்­க­ளைப் பதுக்கி வைத்து கள்­ளச்சந்­தை­யில் விற்­பனை செய்து வந்­தது காவல் துறையின் கவ­னத்­துக்­குச் சென்­றது.

அத­னைத் தொடர்ந்து ஓட்­டேரி காவல் நிலைய பெண் உதவி ஆய்­வா­ளர் சஜீபா தலை­மை­யி­லான படை­யி­னர் அவ­ரது வீட்­டிற்­குச் சென்று சோத­னை­யிட்­ட­னர். அங்கு பதுக்கி வைத்­தி­ருந்த மது போத்­தல்­க­ளைப் பறி­மு­தல் செய்ய அவர்­கள் முயன்­ற­போது பெண்­கள் உள்ளிட்ட கும்பல் ஒன்­று­தி­ரண்டு அதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்­த­து. அங்­கி­ருந்து புறப்­பட முயன்ற சஜீ­பாவை அவர்கள் தாக்­கத் தொடங்­கி­னர்.

அப்­போது அங்கு வந்து சேர்ந்த மற்றொரு காவல் துறை அதி­காரி மணி­வண்­ணன் தாக்­கு­த­லிலிருந்து சஜீ­பாவை மீட்க முயன்­றார். கும்­பல் அவ­ரை­யும் தாக்­கத் தொடங்­கி­யது. மேலும் காவல் துறை­யி­ன­ரி­டம் இருந்து லத்­தியை அக்­

கும்­பல் பறித்­துக்­கொண்­டது.

இச்­சம்­ப­வத்­தில் சஜீபா, மணி­வண்­ணன், காவ­லர் ஒரு­வர் என மூவர் காயங்­க­ளு­டன் மருத்­து­வ­

ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

இது தொடர்­பாக தலை­மைச் செய­ல­கக் குடி­யி­ருப்பு காவல்­

து­றை­யி­னர் வழக்­குப்­ப­திவு செய்து சம்­பவ இடத்­துக்­குச் சென்­ற­னர். தாக்­கு­த­லில் ஈடு­பட்­ட­வர்­கள் அதற்­குள் தங்­கள் வீடு­க­ளைப் பூட்­டி­விட்டு தலை­ம­றை­வாகிவிட்­ட­னர். தீவிரத் தேட­லுக்­குப் பின்­னர் பெண்­கள் உள்­ளிட்ட 11 பேரை காவல் துறை­யி­னர் கைது செய்­த­னர். பின்­னர் அவர்­கள் அனை­வ­ரும் விசா­ர­ணைக் கைதி­களாகச் சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர்.