கொரோனா நோயாளிகளைச் சந்தித்த முதல்வர்

கொரோனா நோயாளிகளைச் சந்தித்த முதல்வர்

1 mins read
984a055d-9860-4401-b4b6-c4015411e2e0
-

கோவை: கோவை, திருப்­பூர், ஈரோடு மாவட்­டங்­களில் கொரோனா தடுப்­புப் பணி­களை முதல்­வர் ஸ்டா­லின் நேற்று மேற்­பார்­வை­யிட்­டார். கோவை இஎஸ்ஐ மருத்­து­வ­

ம­னை­யில் கொரோனா நோயா­ளி­களை அவர் நேரில் சந்­தித்து நலம் விசா­ரித்­தார்.

"எப்­படி இருக்­கீங்க.. மூச்சு விட முடி­யுதா.. மருத்­து­வர்­கள் எப்­படிப் பார்த்­துக்­கொள்­கி­றார்­கள், சீக்­கி­ரம் குண­ம­டைந்து விடு­வீர்­கள்," என்று ஆறு­த­லாக அவர் நோயா­ளி­க­ளி­டம் பேசி­னார்.

நோயா­ளி­க­ளைக் காண 'பிபிஇ' கவச உடை அணிந்து அவர் சென்­றார். மருத்­து­வர்­களும் அப்­போது அவ­ரு­டன் இருந்­த­னர்.

முதல்வர் ஸ்டாலின் செயலை ஊடகங்கள் புகழ்ந்துள்ளன.

"நாட்­டி­லேயே 'பிபிஇ' கவச உடை அணிந்து கொரோனா நோயா­ளி­களை எந்த மாநில முதல்­வ­ரும் இது­வரை சந்­தித்­தது இல்லை. மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குச் சென்று பார்­வை­யிட்­டா­லும்­கூட, நோயா­ளி­க­ளின் வார்­டுக்கு முதல்­வர்­கள் யாரும் இது­வரை சென்­றது இல்லை. ஆனால் முதல் முறை­யாக முதல்­வர் ஸ்டா­லின் நேர­டி­யாக நோயா­ளி­க­ளைச் சந்­தித்­துள்­ளார்," என்று அவை குறிப்­பிட்­டுள்­ளன.

கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளைச் சந்தித்த ஒரே முதல்வர் ஸ்டாலின் என ஊடகங்கள் கூறுகின்றன. படம்: தமிழக ஊடகம்