செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
16738ff1-76fc-437f-975d-91e5232581d7
-

ஆ. ராசா மனைவி கால­மா­னார்

சென்னை: திமுக துணை பொதுச்­செயலாள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னருமான ஆ.ராசா­வின் மனைவி பர­மேஸ்­வரி (படம்), உடல்­ந­லக்­கு­றைவு கார­ண­மாக கால­மா­னார். அவ­ருக்கு வயது 56.

ஆறு மாதங்­க­ளாக புற்றுநோயால்

அவ­திப்­பட்டு வந்த பர­மேஸ்­வரி,

குரோம்­பேட்­டை­யி­லுள்ள டாக்­டர் ரெலா மருத்­து­வ­ம­னை­யின் தீவிர சிகிச்­சைப்

பிரி­வில் அனு­ம­திக்­கப்பட்­டி­ருந்­தார். செயற்­கைச் சுவா­சம் பொருத்­தப்­பட்டு, மருத்­து­வர்­களும் புற்­று­நோ­யி­யி­யல்

துறை நிபு­ணர்­களும் தீவி­ர­மா­கக்

கண்­கா­ணித்து, சிகிச்சை அளித்து வந்த நிலை­யில், சிகிச்சை பல­னின்றி சனிக்­கி­ழமை இரவு 7.10 மணி­ய­ள­வில் அவ­ரது உயிர் பிரிந்­தது. அவ­ரது மறைவுக்கு முதல்­வர் ஸ்டாலின் இரங்­கல் தெரி­வித்­துள்­ளார்.

கள்­ளச்­சா­ரா­யம் குடித்த இரு­வர் பார்­வை­யி­ழந்து மாண்­ட­னர்

மயி­லா­டு­துறை: மயி­லா­டு­துறை சேந்­தங்­கு­டி­யைச் சேர்ந்­த­வர் பிரபு, 33, அச்­சக ஊழி­யர். அதே பகு­தி­யைச் சேர்ந்த செல்வம், 36, வீரா­சாமி, 52, சரத்­கு­மார், 28, ஆகி­யோர் உள்­ளிட்ட 6 பேர் அப்­ப­கு­தி­யில் விற்­பனை செய்­யப்­பட்ட கள்­ளச் சாரா­யத்தை வாங்­கிக் குடித்­து­விட்டு வீட்­டிற்­குச் சென்­ற­னர். சிறிது நேரத்­தில் பிரபு, செல்­வம் ஆகி­யோ­ரின் கண் பார்வை பாதிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, அவ­ரது உற­வி­னர்­கள் மயி­லா­டு­துறை அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அவ­ரைச் சேர்த்­த­னர். அங்கு சிகிச்சை பல­னின்றி பிரபு உயி­ரி­ழந்­தார். தொடர்ந்து செல்­வ­மும் அவ­ரது வீட்­டி­லேயே உயி­ரி­ழந்­தார். கடந்த 10 ஆண்டு கால­மாக தமி­ழ­கத்­தில் கள்­ளச்­சா­ராய சாவு குறைந்­தி­ருந்த நிலை­யில், தற்­போது ஊர­டங்கு காலத்­தில் டாஸ்­மாக் மது­பா­னக் கடை­கள் மூடப்­பட்­டி­ருப் பதைப் பயன்­ப­டுத்தி ஆங்­காங்கே ஊறல் மற்­றும் எரி­சா­ரா­யம் தயா­ரிக்­கப்­பட்டு மயி­லா­டு­துறை மாவட்­டத்­தில் உள்ள கிரா­மப்­ப­கு­தி­களில் விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தாக ஊட­கங்­கள் தெரி­வித்து வரு­கின்­றன.

கரு­ணா­நிதி பிறந்­த­நாளை வீட்­டில் கொண்­டாட வேண்­டு­கோள்

சென்னை: முன்­னாள் முதல்­வர் கரு­ணா­நி­தி­யின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி வரும் நிலை­யில் அது­தொ­டர்­பாக, திமுக தலை­வர் ஸ்டா­லின் கட்­சித் தொண்­டர்­க­ளுக்கு கடி­தம் எழு­தி­யுள்­ளார். அதில், "மக்­க­ளின் உயி­ரைக் காப்­பது ஒன்றே நம் முன் உள்ள தலை­யா­யப் பணி. அதற்­காக முழு­மை­யாக அர்ப்­ப­ணித்­துச் செய­லாற்­று­வதே கரு­ணா­நிதி பிறந்­த­நாள் விழா­வுக்­குச் செய்­யும் சிறப்பு. ஊர­டங்கு காலம் என்­ப­தால் பொது­வெ­ளி­யில் பிறந்­த­நாள் விழா நிகழ்வு எது­வும் நடத்­திட வேண்­டாம். அதற்­குப் பதில் அவ­ர­வர் இல்­லங்­களில் கரு­ணா­நிதி உரு­வப் படத்­திற்கு மரி­யாதை செலுத்­துங்­கள்," என்று ஸ்டா­லின் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

அர­சின் முடி­வுக்கு பாமக எதிர்ப்பு

சென்னை: பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார். அதில், "கோவை, திருப்­பூர், மதுரை உள்­ளிட்ட 8 மாவட்­டங்­கள் தவிர மீத­முள்ள 30 மாவட்­டங்களில் ஏற்­று­மதி நிறு­வ­னங்­க­ளைத் திறக்க அரசு அனு­மதி அளித்­துள்­ளது. கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த முழு ஊர­டங்கு அம­லில் இருக்­கும் நிலை­யில் அதன் நோக்­கத்தை சிதைக்­கும் வகை­யி­லான இந்த முடிவு மிக­வும் ஆபத்­தா­னது. தமிழ்­நாடு இன்­னும் ஆபத்­தான கால­கட்­டத்­தைத் தாண்டவில்லை. இத்­த­கைய சூழ­லில் அவ­சர, அவ­ச­ர­மாக ஏற்­று­மதி நிறு

­வ­னங்­கள் செயல்­பட அனு­ம­தித்­தது ஏன் எனத் தெரி­ய­வில்லை," என்று அவர் கூறி­யுள்­ளார்.

கிருமிக்கு எதிராக வேப்பிலை

வேதா­ரண்­யம்: பெரும்­பா­லான கிரா­மங்­களில் கொரோ­னா­வின் பர­வல் அதி­க­மா­கக் காணப்­ப­டு­வ­தால் வேதா­ரண்­யத்­தில் ஆங்­காங்கே தெருக்­கள் அடைக்­கப்­பட்டு ஊருக்­குள் கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது. ஆயக்­கா­ரன்­பு­லம் 4ஆம் சேத்தி, கோயில்­கு­ளம் தெற்கு காட்­டில் சாலையை அடைத்து குறுக்கே மரங்­க­ளைப் போட்டு மறித்து வேப்­பி­லை­க­ளைத் தொங்­க­விட்டுள்­ள­னர்.

பால் விலை: ரூ.270 கோடி இழப்பு

நெல்லை: ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதால் தமிழக அரசுக்கு 270 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த இழப்பை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். நெல்லையில் ஆவின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஊரடங்கு காலத் தில் அத்தியாவசியத் தேவையான பாலை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களிடமிருந்து சரியான முறையில் பெற்று விற்பனை செய்வது தொடர்பான ஆய்வுப் பணிகள்

நடந்து வருவதாகக் கூறினார்.