ஹரியானாவில் 50 பேர், கர்நாடகாவில் 35 பேர் கறுப்புப் பூஞ்சைக்கு பலி

ஹரியானாவில் 50 பேர், கர்நாடகாவில் 35 பேர் கறுப்புப் பூஞ்சைக்கு பலி

2 mins read
a2af9fbe-abe0-4558-8832-12d0a3bcc284
-

புது­டெல்லி: கறுப்­புப் பூஞ்சை நோயால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை நாடு முழு­வ­தும் சீராக அதி­க­ரித்து வரு­கிறது. இந்­நிலை­யில் ஹரி­யானா மாநி­லத்­தில் இந்­நோய்க்கு இது­வரை 50 பேர் பலி­யாகி உள்­ள­னர்.

கர்­நா­ட­கா­வில் இந்த நோய் 35 பேரின் உயி­ரைக் காவு வாங்கி உள்­ளது. தமி­ழ­கத்­தி­லும் பூஞ்சை நோய் வேக­மா­கப் பரவி வரு­வ­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த இரு வாரங்­க­ளாக ஹரி­யா­னா­வில் கறுப்­புப் பூஞ்சை நோயால் பாதிக்­கப்­ப­டு­ப­வர் எண்­ணிக்கை வேக­மாக அதி­க­ரித்து வரு­வ­தாக அம்­மா­நில முதல்­வர் மனோ­கர்­லால் கட்­டார் தெரி­வித்­துள்­ளார்.

"இது­வரை 788 பேருக்கு கறுப்­புப்­பூஞ்சை நோய் பாதிப்பு இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. இவர்­களில் 58 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். 50 பேர் பலி­யா­கி­விட்ட நிலை­யில் மற்­ற­வர்­க­ளுக்­குத் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது," என்று முதல்­வர் மனோ­கர்­லால் கட்­டார் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

கர்­நா­ட­கா­வில் நேற்­றைய நில­வ­ரப்­படி பூஞ்சை நோயால் 1,250 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் இது­வரை 35 பேர் உயி­ரி­ழந்துவிட்­ட­னர் என்­றும் அம்­மா­நில சுகா­தார அமைச்­சர் சுதா­கர் தெரி­வித்­துள்­ளார்.

இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க உத­வும் ஆம்­போ­டெ­ரி­சின் மருந்துக் குப்­பி­களை மத்­திய அரசு கர்­நா­ட­கா­வுக்கு வழங்கி உள்­ளது என்­றும் முதற்­கட்­ட­மாக 10 ஆயி­ரம் குப்­பி­கள் வந்­துள்­ள­தா­க­வும் அமைச்­சர் சுதா­கர் கூறி­னார்.

இந்­நி­லை­யில் தமி­ழ­கத்­தில் ஆம்­போ­டெ­ரி­சின் மருந்­துக்கு கடும் தட்­டுப்­பாடு நில­வு­வ­தாக தினத்­தந்தி செய்தி ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் திண்­டுக்­கல்­லைச் சேர்ந்த 42 வய­தான ஓட்­டு­நர் ஒரு­வர் இந்­நோய்க்­குப் பலி­யாகி உள்­ளார்.

அரசு, தனி­யார் மருத்­து­வ­மனை­க­ளின் மூக்கு, கண், மூளை, தொற்­று­நோய் நிபு­ணர்­கள் 13 பேர் அடங்­கிய மருத்­து­வக் குழு­அ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா நெருக்­கடி வேளை­யில் அமைத்­த­து­போல, கறுப்புப் பூஞ்­சைக்கு சிகிச்­சை­அ­ளிக்க அரசு மருத்­து­வ­ம­னை­களில் சிறப்பு படுக்­கை­கள் அமைக்­கப்­படுகின்றன.