'சென்ட்ரல் விஸ்டா': தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

'சென்ட்ரல் விஸ்டா': தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

1 mins read
59c2a546-d052-4fbb-a99a-fefba4f6a7e1
-

புது­டெல்லி: சென்ட்­ரல் விஸ்டா கட்­டு­மா­னப் பணி­க­ளுக்குத் தடை விதிக்க இய­லாது என டெல்லி உயர் நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

மேலும், இது தொடர்­பாக வழக்கு தொடுத்த மனு­தா­ரர்­க­ளுக்கு ஒரு லட்­சம் ரூபாய் அப­ரா­த­மும் விதித்­துள்­ளது.

புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டம், அதைச்­சுற்றி அமைக்­கப்­படும் அரசு அலு­வலகங்­கள் ஆகி­ய­வற்­று­டன் பிர­த­ம­ருக்­கான புதிய இல்­லம் கட்­டும் பணியை சென்ட்­ரல் விஸ்டா எனும் திட்­டத்­தின் கீழே செயல்­ப­டுத்தி வரு­கிறது மத்­திய அரசு.

கொரோனா நெருக்­க­டி­யில் இது­போன்ற திட்­டங்­கள் தேவை­யற்­றவை என எதிர்க்­கட்­சி­கள் கடு­மை­யாக விமர்­சித்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் இந்­தத் திட்­டத்­தின் ஒட்­டு­மொத்த கட்­டு­மா­னப் பணி­க­ளை­யும் நிறுத்தி வைக்­கக்­கோரி டெல்லி உயர் நீதி­மன்­றத்­தில் பொது­நல வழக்கு தொடுக்­கப்­பட்­டது. நேற்று நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யின்­போது சென்ட்­ரல் விஸ்டா கட்­டு­மா­னம் தேசிய முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது என டெல்லி உயர் நீதி­மன்­றம் தெரி­வித்­தது.

மேலும், அத்­தி­யா­வ­சி­ய­மான இந்தப் பணிக்குத் தடை விதிக்க இய­லாது என்று கூறி­ய­து­டன், வழக்கு தொடுத்த மனு­தா­ரர்­க­ளுக்கு அப­ரா­த­மும் விதித்­தது.