புதுடெல்லி: நடப்பாண்டின் இறுதிக்குள் நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப்பரவலைத் தடுக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு எவ்வாறு செயல்படுத்துகிறது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அதில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என இலக்கு நிர்ணயிப்பதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இலக்கை எட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தனது மனுவில் மேலும் தெரிவித்துள்ளதாக 'தமிழ் இந்து' செய்தி வெளியிட்டுள்ளது.

