ஒருதலைப்பட்சமான செயல்பாடு: மம்தா புகார்

ஒருதலைப்பட்சமான செயல்பாடு: மம்தா புகார்

1 mins read
b5718e93-b4c8-45db-9653-3e893d1e0d1c
-

கோல்­கத்தா: மேற்கு வங்க மாநி­லம் கொரோனா நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க போராடி வரும் நிலை­யில், அம்­மா­நி­லத்­தின் தலை­மைச் செய­லா­ளர் அல்­பன் பண்­டோ­பாத்­யா­யாவை டெல்­லிக்கு அழைக்­கும் செயலை ஏற்க இய­லாது என முதல்­வர் மம்தா பானர்ஜி தெரி­வித்­துள்­ளார்.

இது ஒரு­த­லைப்­பட்­ச­மான செயல்­பாடு என பிர­த­மர் மோடிக்கு அனுப்­பி­யுள்ள கடி­தம் ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"கடந்த மூன்று மாதங்­க­ளுக்கு முன்­பு­தான் அல்­பன் பண்­டோ­பாத்­யா­யா­வின் பணி நீட்­டிப்­புக்கு ஒப்­பு­தல் தெரி­வித்து மத்­திய உள்­துறை அமைச்­ச­கம் உத்­த­ரவு பிறப்­பித்­தது. இந்­தச் சூழ­லில் திடீர் மாற்­றம் ஏன்?

"மத்­திய அர­சின் இந்­தச் செயல் அதிர்ச்சி அளிக்­கிறது. இது ஒரு­த­லைப்பட்சமானது. எனவே இந்த உத்­த­ரவை உள்­துறை அமைச்சு திரும்­பப் பெற வேண்­டும்.

"நாடு­மு­ழு­வ­தும் கொரோனா பர­வல் அதி­க­ரித்து அதற்கு எதி­ரான போராட்­ட­மும் நீடித்து வரு­கிறது. மேற்கு வங்­கத்­தி­லும் கொரோ­னா­வுக்கு எதி­ரான போரில் இறங்­கி­யுள்­ளோம்.

"இந்த இக்­கட்­டான சூழ­லில் மாநி­லத்­தின் தலை­மைச் செய­லாளரை டெல்­லிக்கு அழைப்பது ஏற்க முடி­யாத செயல்," என தமது கடி­தத்­தில் முதல்­வர் மம்தா பானர்ஜி மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

அண்­மை­யில் 'யாஸ்' புய­லால் மேற்கு வங்­கத்­தில் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­கள் குறித்து கோல்­கத்­தா­வில் பிர­த­மர் மோடி தலை­மை­யில் ஆய்­வுக்­கூட்­டம் நடை­பெற்­றது.

அக்­கூட்­டத்தை முதல்­வர் மம்தா வேண்­டும் என்றே புறக்­க­ணித்­த­தாக புகார் எழுந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் அம்­மா­நில தலை­மைச் செய­லா­ளர் மீண்­டும் மத்­திய அரசுப் பணிக்கு அழைக்­கப்­பட்­டுள்­ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் மம்தா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.