தமிழக வளர்ச்சிக் கொள்கைக் குழு சீரமைப்பு; புது உறுப்பினர்கள்

1 mins read
6b337b4f-962b-482e-99c2-9659f6a49869
-

சென்னை: தமிழ்­நாட்­டின் பல்­வேறு வளர்ச்­சிக்­கான செயல்­பா­டு­கள் தொடர்­பில் அர­சுக்கு ஆலோ­ச­னை­களை வழங்கி வரும் மாநில வளர்ச்சிக் கொள்­கைக் குழு சீர­மைக்கப்பட்­டுள்­ளது.

முக்­கிய பணி­க­ளுக்­கான இலக்கு­களை நிர்­ண­யிப்­பது, கொள்­கைக்­கான ஆலோ­சனை வழங்­கு­தல், சிறப்புத் திட்­டங்­க­ளைச் செயல்­படுத்­து­வது உள்­ளிட்ட பல்­வேறு பணி­களை மேற்­கொண்டு வரும் அக்குழு சீர­மைக்­கப்­பட்டுள்­ளது.

பேரா­சி­ரி­யர் ஜெ. ஜெய­ரஞ்­சன் துணைத் தலை­வ­ரா­க­வும் பேரா­சிரி­யர். இராம. சீனு­வா­சன் முழு­நேர உறுப்­பி­ன­ரா­க­வும் நிய­மிக்­கப்­பட்டு உள்­ள­தாக அரசு அறி­விப்பு தெரி­வித்­தது. திருநங்கை நர்த்தகி நடராஜ் உட்பட பல துறையாளர்கள் பலரும் பகுதி நேர உறுப்பினர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.