தத்ரூப ஓவியர் இளையராஜா மறைவு: முதல்வர் இரங்கல்

தத்ரூப ஓவியர் இளையராஜா மறைவு: முதல்வர் இரங்கல்

1 mins read
f717810e-0fff-4b37-9262-c68b89bc9df6
ஓவியர் இளையராஜா. ஊடகம் -

கும்பகோணம்: புகைப்­ப­டமா, ஓவி­யமா என எல்­லோ­ரையும் வியக்க வைக்கும் தத்­ரூபமான ஓவி­யங்­க­ளின் அர­ச­னாக விளங்கி வந்­த­வர் இளை­ய­ராஜா.

பிரபல வார இதழில் 2010 முதல் வெளி­வ­ரத் தொடங்­கிய இவ­ரது ஓவி­யங்­கள் உல­கம் முழுக்க புகழ்­பெற்­றன.

கிராமப்புற பெண்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் அளவுக்கு தத்ரூபமாக ஓவியங்களை வரைபவர். பல்­வேறு விருதுகளை­யும் அங்­கீ­கா­ரங்­க­ளை­யும் பெற்­றி­ருக்­கும் இளை­ய­ராஜா, 43, நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு 12 மணி­யள வில் கொரோனா தொற்­றால் ஏற்­பட்ட மார­டைப்பு கார­ண­மாக மர­ண­ம­டைந்­தார்.

இளை­ய­ரா­ஜா­வின் மறைவுக்கு முதல்­வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வலைத்தளவாசி களும் இரங்­கல் தெரி­வித்து வரு­கின்றனர்.

கும்பகோணம் அருகே செம்பிய வரம்பில் எனும் கிராமத்தில் பிறந்த வர் இளையராஜா. அவ­ருக்கு அண்­மை­யில் உடல்­நலக்­கு­றைவு ஏற்­ப­டவே எழும்­பூ­ரில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிசிச்சை பெற்றுவந்த நிலையில் கால­மா­னார்.