தொற்று பாதியாகக் குறைவு

தொற்று பாதியாகக் குறைவு

1 mins read
23acee93-1df0-49e8-b6e1-b92dbff73d7a
-

சென்னை: தமி­ழ­கத்­தில் அறி­விக்­கப்­பட்ட முழு ஊர­டங்கு பெரிய அள­வில் வெற்றி அடைந்­தி­ருப்­ப­தாக நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

சென்னை வேளச்­சே­ரி­ தனி­யார் கல்­லூ­ரி­யில் 3,000 மருத்­துவ களப் பணி­யா­ளர்­க­ளுக்கு உணவு தயா­ரித்து காவல் துறை வாக­னம் மூலம் அனுப்பி வைத்து வரு­கின்­ற­னர். இதனை நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் ஆகி­யோர் நேற்று பார்­வை­யிட்­ட­னர். அதன் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மிப் பர­வ­லுக்கு மிக விரை­வில் முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படும் என்­றார்.

அவர் மேலும் கூறு­கை­யில், முழு ஊர­டங்கு பெரிய அள­வில் வெற்­றி­ய­டைந்­துள்­ளது, தொற்­றின் அளவு சரி­பா­தி­யா­கக் குறைந்­துள்­ளது. பெரிய அள­வில் நம்­பிக்­கை­யைத் தரு­கிறது. தமிழ்­நாட்­டின் 25 மாவட்­டங்­களில் கிரு­மிப் பர­வல் கட்­டுக்­குள் இருக்­கிறது.

கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை விட குண­

ம­டைந்து வரு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக உள்­ளது.

இதற்கு முன்பு ஆட்­சி­யில் இருந்­த­வர்­கள் கிரு­மிப் பர­வல் முதல் அலை­யின்­போது எல்­லாக் கடை­களும் மூடப்­பட்டு இருந்த நேரத்­தில் மதுக் கடை­கள் திறந்து வைத்­தி­ருந்­தார்­கள். ஆனால் இப்­போது மற்ற கடை­க­ளு­டன் மதுக் கடை­களும் மூடப்­பட்டு உள்­ளன. இதி­லி­ருந்தே இரண்டு ஆட்சி நிர்­வா­கத்­திற்­கும் உள்ள வித்­தி­யா­சத்தை மக்­கள் புரிந்­து­கொள்­ள­லாம்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: ஊரடங்கால் பலன் கிடைத்துள்ளது