ஐந்து மாதத்தில் ஆட்சி கவிழலாம்: கிருஷ்ணசாமி

ஐந்து மாதத்தில் ஆட்சி கவிழலாம்: கிருஷ்ணசாமி

1 mins read
2e1f6532-e2a4-49af-aadd-72329da38337
-

சென்னை: புதிய தமி­ழ­கம் கட்­சி­யின் நிறு­வ­னர் கிருஷ்­ண­சாமி நேற்று ஓர் அறிக்கை வெளி­யிட்­டார். அதில் அவர், "இறை­யாண்மை மிக்க இந்­தி­யப் பேர­ரசை 'ஒன்­றிய அரசு' எனத் தொடர்ந்து அழைப்­பது எட்­டுக்­கோடி தமிழ் மக்­க­ளின் உணர்­வு­க­ளைக் காயப்­ப­டுத்­து­வ­தற்­கும் 140 கோடி இந்­திய மக்­க­ளைச் சீண்­டிப் பார்ப்­ப­தற்­கும் சம­மா­ன­தும் சட்­ட­வி­ரோ­த­மா­ன­தும் தேச­வி­ரோ­த­மா­ன­தும் ஆகும்.

"திமு­க­வும் அதன் கூட்­ட­ணிக் கட்­சி­யி­ன­ரும் இந்­திய அரசை 'ஒன்­றிய அரசு' எனக் குறிப்­பி­டு­வ­தும் 'திரா­விட நாடு' என்ற பிரி­வினை முழக்­க­மும் உள்­ள­டக்­கத்­தில் ஒன்றே.

"ஏற்­கெ­னவே '1976, 1990களில் ஆட்­சியை இழந்­தது நினை­வில் இல்­லா­மலா போய்­

வி­டும்? இது தொடர்ந்­தால் ஐந்து வரு­டத்­திற்­குப் பிறகு வர­ வேண்­டிய முடிவு, ஐந்தே மாதத்­தில் வந்துவிடுமோ என்ற சந்தே­க­மும் எழா­மல் இல்லை," என்று கூறி­யுள்­ளார்.