சென்னை: திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவால் அறிவிக்கப்பட்டார். ஆனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், அதிமுக கொறடா ஆகிய பொறுப்புகளில் இதுவரை யாரும் நியமிக்கப்படாதது அதிமுகவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், வரும் 14ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா தேர்வு பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு கொடுத்தார். அதன் பிறகு செய்தியாளர்
களைச் சந்தித்த அவர், "சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இந்த நிலை தொடரும். அதிமுக பொதுச்செயலாளராக யாரையும் தேர்வுசெய்ய மாட்டோம். ஓபிஎஸ், இபிஎஸ்தான் கட்சியை வழிநடத்துவர்," என்றார்.

