சென்னை: அண்மையில் பெண் வழக்கறிஞர் ஒருவர் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களைக் கடுமையாகவும் ஒருமையிலும் பேசிய காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை அரும் பாக்கத்தில் போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சோதனையின்போது வாகன ஓட்டிகள் கோபமாகப் பேசினாலும் காவல்துறையினர் கோபப்பட வேண்டாம். காணொளி எடுங்கள். பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். மக்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்தால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்," என்றார்.
கடுமை கூடாது: காவல்துறைக்கு வேண்டுகோள்
1 mins read
-

