ரூ.40 லட்சம் சட்டவிரோத மதுபானம் சிக்கியது

ரூ.40 லட்சம் சட்டவிரோத மதுபானம் சிக்கியது

1 mins read
5bdebb17-1bd8-465a-bb91-262550a80f4d
-

சென்னை: தமி­ழ­கத்­தில் மது­பா­னக் கடை­கள் மூடப்­பட்­டுள்­ள­தால் மது பிரியர்கள் கர்­நா­ட­கா மாநிலத்துக்குச் சென்று அங்­கி­ருந்து மது போத்­தல்­க­ளைக் கடத்தி வந்து குடிக் கின்றனர்.

காய்­கறி மற்­றும் மளிகைப் பொருட்­களை ஏற்றிவரும் வாக­னங்­களில் அவற்றை மறைத்து கடத்தி வரு­கின்­ற­னர். அதனை அறிந்­த­தும் கர்­நா­ட­கத்­தில் இருந்து தமி­ழ­கத்­திற்­குள் நுழை­யும் வாக­னங்­களை காவல் துறை­யி­னர் இரவு பக­லா­கச் சோத­னை­யிட்­ட­னர்.

காரி­லும் மோட்­டார்­சைக்­கி­ளி­லும் கடத்தி வரப்­பட்ட மது போத்­தல்­கள் அப்­போது சிக்­கின.

ஒரு மாத காலத்­தில் ரூ.40 லட்­சம் மதிப்­பி­லான மது போத்­தல்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக மது­வி­லக்கு காவல்­துறை கண்

­கா­ணிப்பு அதி­காரி மகேஷ்­கு­மார் கூறி­னார்.

இவற்­றைக் கடத்தி வந்த 40 கார்­களும் 80 மோட்­டார்­சைக்­கிள்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.