முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை: பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் தளர்வில்லை ஒரு வாரம் நீட்டிக்க பரிந்துரை

முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை: பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் தளர்வில்லை ஒரு வாரம் நீட்டிக்க பரிந்துரை

2 mins read
c77b83b3-ecb9-4f93-a5e0-be9521b6dd41
ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் அன்னதானம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் கூறினார். படம்: ஏஎஃப்பி -

சென்னை: தமி­ழ­கத்­தில் மேலும் ஒரு வார காலத்­துக்­குத் தளர்வு களு­டன் கூடிய ஊர­டங்கை நீட்­டிக்க முதல்­வர் மு.க.ஸ்டாலினிடம் உயர் அதி­கா­ரி­கள் பரிந்­துரை செய்­துள்­ள­தாக தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

மாநி­லம் முழு­வ­தும் கிரு­மிப் பர­வல் படிப்­ப­டி­யா­கக் குறைந்து வந்­தா­லும் உயி­ரி­ழப்­பு­கள் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், இந்த ஊர­டங்கை நீட்­டிப்­பது தொடர்­பா­க­வும் கூடு­தல் தளர்­வு­கள் வழங்­கு­வது குறித்­தும் முதல்­வர் ஆலோ­சனை மேற்­கொண் டார்.

இந்த ஊர­டங்கு ஜூன் 14ஆம் தேதி காலை 6 மணி­யு­டன் முடி­வ­டைய உள்ள நிலை­யில், சென்னை தலை­மைச் செயலகத்­தில் நடை­பெற்ற ஆலோசனைக் கூட்­டத்­தில், சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், தலை­மைச் செய­லா­ளர் இறை­யன்பு, சுகா­தா­ரத்­துறை செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன், வரு­வாய்த் துறை செய­லா­ளர் குமார் ஜெயந்த், டிஜிபி திரி­பாதி உள்­ளிட்ட முக்­கிய அதிகாரி­கள் கலந்­து­கொண்­ட­னர்.

இந்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் ஊர­டங்கை மேலும் ஒரு வாரம் நீட்­டிக்க அதி­கா­ரி­கள் பரிந்­துரை செய்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

பாதிப்பு குறை­வாக உள்ள மாவட்­டங்­களில் மதுக்­கடை களைத் திறக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும் பாதிப்பு குறை­யாத 11 மாவட்­டங்­களில் தளர்­வு­கள் இருக்­காது என்­றும் கூறப்­ப­டு­கிறது. ஊர­டங்கு நீட்­டிப்பு மற்­றும் புதிய தளர்­வு­கள் குறித்து இன்று அல்­லது நாளை அறி­விக்­கப்­பட வாய்ப்புள்­ளது.

இதற்­கி­டையே, தமி­ழக அர­சின் கடு­மை­யான நடவடிக்கைகள் மூலம் கொரோனா கிரு­மிப் பர­வ­லின் சங்­கி­லியை உடைக்­கும் முயற்­சிக்கு ஓர­ளவு நல்ல பலன் கிடைத்­தி­ருப்­ப­தா­க­வும் அறிக்கை ஒன்­றில் முதல்வர் கூறி­யுள்­ளார்.

திருச்சி, தஞ்சை, சேலம் ஆகிய மூன்று மாவட்­டங்­களில் இன்று முதல் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்ள உள்­ள­தாக கூறி­யுள்ள முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டா­லின், இது முழுக்க முழுக்க அரசு முறைப் பய­ணம் என்­றும் தெரி­வித்­துள்­ளார்.