அனைத்துக் கட்சியினருக்கும் சம வாய்ப்பு

அனைத்துக் கட்சியினருக்கும் சம வாய்ப்பு

1 mins read
4064c30b-b172-4792-b82f-1ad47c144e97
-

சென்னை: 16வது தமி­ழக சட்ட மன்­றக் கூட்­டத்­தொ­டர் சென்னை கலை­வா­ணர் அரங்­கில் ஆளு­நர் பன்­வா­ரி­லால் புரோ­ஹித் உரை­யுடன் வரும் 21ஆம் ேததி தொடங்க உள்­ள­தாக சபா­நா­ய­கர் மு.அப்­பாவு அறி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து தலை­மைச் செய லகத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் மு.அப்­பாவு பேசி­ய­போது, "சட்ட மன்­றத்­தில் ஆளும் கட்சி, கூட்ட ணிக் கட்சி, எதிர்க்­கட்சி என்­ற பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்­சி­யி­ன­ருக்­கும் சம வாய்ப்­பு­கள் வழங்­கப்­பட்டு, ஜனநாயக முறை­யில் அவை நடத்­தப்­பட வேண்­டும் என்­பதே முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னின் எண்­ணம். அந்த அடிப்­ப­டை­யில்­தான் சட்­ட­மன்றக் கூட்­டத் தொடர் அனைத்­தும் நடைபெறும்.

"சட்­ட­ச­பை­யில் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரை நிகழ்த்த உள்­ளார். இதற்கு முன்பு எம்­எல்­ஏக்­கள் மட்­டு­மல்­லா­மல் அங்கு பணி­யாற்ற வரும் அனை வருக்­கும் கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­படும். தொற்­றில்­லா­த­வர்­கள் மட்­டுமே சட்டசபைக்­குள் அனு­ம­திக்­கப்­படு வார்­கள்," என்று அவர் கூறி­னார்.