மா.சுப்ரமணியன்: மக்களுக்கு தடுப்பூசிகள் குறித்து அனைத்தும் தெரிய வேண்டும்

மா.சுப்ரமணியன்: மக்களுக்கு தடுப்பூசிகள் குறித்து அனைத்தும் தெரிய வேண்டும்

2 mins read
16549e99-1263-46f6-9471-9472f5ef52e0
-

சென்னை: தடுப்­பூ­சி­கள் குறித்து அனைத்­துத் தக­வல்­க­ளை­யும் பொது­மக்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­து­வ­து­தான் சரி­யாக இருக்­கும் என தமி­ழக சுகா­தார அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் கூறியுள்­ளார்.

உண்மை நிலையை மக்­க­ளுக்­குத் தெரி­விப்­ப­தன் மூலம் அவர்­கள் தடுப்­பூசி மையங்­களில் வரி­சை­யில் காத்­தி­ருந்து ஏமா­றும் நிலை தவிர்க்­கப்­படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தடுப்­பூசி கையி­ருப்பு, விநி­யோக நிலை உள்­ளிட்ட தக­வல்­கள், தர­வு­களை மாநில அர­சு­கள் பொது­வெளி­யில் தெரி­விக்க வேண்­டாம் என மத்­திய அரசு கேட்­டுக் கொண்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆனால், தடுப்­பூ­சி­கள் குறித்த உண்மை நிலையை மக்­க­ளுக்கு அவ­சி­யம் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும் என மா. சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­யுள்­ளார். தமி­ழ­கத்­துக்கு இது­வரை 10,163,000 தடுப்­பூ­சி­கள் வந்­துள்­ளன என்­றும் அவற்­றுள் 9,762,957 மக்­க­ளுக்­குப் போடப்­பட்­டுள்­ளது என்­றும் அமைச்­சர் தெரி­வித்­துள்­ளார். மாநி­லம் முழு­வ­தும் 36 மாவட்­டங்­களில் போது­மான தடுப்­பூ­சி­கள் இல்லை என்­றும் அவர் கூறி­ய­தாக தின­க­ரன் நாளேடு செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

தமி­ழக நில­வரம்

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் மேலும் 16,813 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது. 358 பேர் உயி­ரி­ழந்து விட்­ட­னர். நேற்று முன்­தி­னம் 171,237 பேருக்கு பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. அதி­க­பட்­ச­மாக சென்­னை­யில் 45 பேர் மாண்­டு­விட்­ட­னர். 188,664 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

முதல்­வர் கடி­தம்

இந்­நி­லை­யில் நோய்த்­தொற்று இல்­லாத தமி­ழ­கம் உரு­வா­கும் என திமுக தொண்­டர்­க­ளுக்கு முதல்­வர் ஸ்டா­லின் கடி­தம் எழுதி உள்­ளார்.

கட்சி எல்­லை­க­ளைக் கடந்து தமி­ழக அரசு பாராட்­டு­க­ளைப் பெற்று வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"பேரி­டர் காலத்­தில் நாம் கட்­டுண்டு இருக்­கி­றோம். பொறுத்­தி­ருப்­போம், காலம் விரை­வில் மாறும். நோய்த்­தொற்­றில்­லாத தமி­ழ­கம் உரு­வா­கும்," என்று முதல்­வர் மு.க. ஸ்டா­லின் கூறி­யுள்­ளார்.

பெண்­க­ளுக்கு ஆர்­வமில்லை

தமி­ழ­கத்­தில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தில் ஆண்­களை விட பெண்­க­ளுக்கு ஆர்­வம் குறை­வாக உள்­ளது. மாநி­லம் முழு­வ­தும் ஆயி­ரம் ஆண்­க­ளுக்கு 811 பெண்­கள் என்ற விகி­தத்­தில் தடுப்­பூசி போட்­டுக் கொண்­டுள்­ள­னர்.

ராம­தாஸ் வலி­யு­றுத்து

தமி­ழ­கத்­தில் தொற்று பாதிப்பு தற்­போது பாதி­யா­கக் குறைந்­தி­ருப்­பது உண்­மை­தான் என்­றா­லும் இது அரை­குறை ஊர­டங்­கால் கிடைத்­துள்ள அரை­குறை பலன் என்று பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் தெரி­வித்­துள்­ளார். தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த மாநி­லத்­தில் ஊர­டங்­கைக் கடு­மை­யாக்க வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.