திருவனந்தபுரம்: இளம் பெண்ணை சித்திரவதைக்கு உட்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலதிபரை கேரள போலிசார் கைது செய்துள்ளனர்.
33 வயதான மார்ட்டின் ஜோசப் என்ற அவர், பாதிக்கப்பட்ட பெண்ணை அடித்து உதைத்ததுடன், சிறுநீரைக் குடிக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது.
"என்னை படுக்கையில் கட்டிவைத்து துடைப்பம், இடுப்பு பட்டையால் அடிப்பார். தூங்கவிடாமல் தடுக்க என் மீது ஏற்படுத்திய காயங்களின் மேல் சூடான நீரை ஊற்றுவார். அவர் என் கண்களில் மிளகாய் தூள் கலந்த தண்ணீரை தெளிப்பார்'," என்று அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் மார்ட்டின் கைதாகி உள்ளார்.


