கள்ளச் சாராயம், மதுகடத்தல் அதிகரிப்பு

1 mins read
eb104867-d872-4eaf-bd5d-bf0e2cd33382
-

வேலூர்: ஊர­டங்கு கார­ண­மாக தமி­ழ­கத்­தில் மதுக்­க­டை­கள் மூடப்­பட்­டுள்­ளன. இதை­ய­டுத்து சாரா­யம் காய்ச்­சு­வ­தும் வெளி மாநி­லங்­களில் இருந்து மதுப்­புட்­டி­க­ளைக் கடத்தி வரு­வ­தும் அதி­க­ரித்­துள்­ளது.

வேலூர் மாவட்­டத்­தில் மது­வி­லக்கு அம­லாக்­கப் பிரி­வி­னர் அதி­ரடி சோதனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு கடத்தி வரப்­படும் மதுப்­புட்­டி­க­ளைப் பறி­மு­தல் செய்து வரு­கின்­ற­னர்.

ஆந்­திரா, கர்­நா­ட­கா­வில் இருந்து தின­மும் ரயில், கார், இரு­சக்­கர வாக­னங்­களில் மது கடத்தி வரப்­ப­டு­வ­தாக போலி­சார் தெரி­விக்­கின்­ற­னர்.

'ஆப­ரே­ஷன் விண்ட்' என்ற பெய­ரில் மேற்­கொள்­ளப்­படும் சோதனை நட­வ­டிக்­கை­யில் வேலூ­ரில் மட்­டும் ஐம்­பது பேர் கொண்ட குழு ஈடு­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் கள்­ளச்­சா­ரா­யம் காய்ச்­சு­வ­தும் அதி­க­ரித்­துள்­ளது. விழுப்­பு­ரம், புதுக்­கோட்டை, திரு­வண்­ணா­மலை உள்­ளிட்ட மாவட்­டங்­களில் ஆயி­ரக்­க­ணக்­கான லிட்­டர் சாரா­யம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இதே­போல் வெளி­மா­நி­லங்­களில் இருந்து கடத்தி வரப்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான மது­புட்­டி­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்டு சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் மீது வழக்­குப் பதி­வாகி உள்­ளது.

தமிழக, புதுவை எல்லையிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.