தமிழக அரசு: முடி வெட்டும் கடை, அழகு நிலையத்துக்கு அனுமதி, தேநீர் கடைக்கு மறுப்பு மதுக்கடை திறப்புக்கு கண்டனம்

தமிழக அரசு: முடி வெட்டும் கடை, அழகு நிலையத்துக்கு அனுமதி, தேநீர் கடைக்கு மறுப்பு மதுக்கடை திறப்புக்கு கண்டனம்

2 mins read
753a1969-1ad5-4246-8dce-f63d0f000582
-

சென்னை: மாநி­லத்­தில் கொரோனா பர­வல் குறைந்து வரும் நிலை­யில், பொது­மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை கருத்­தில் கொண்டு நாளை 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மேலும் ஒரு வார காலத்­துக்கு தளர்­வு­க­ளு­டன் கூடிய ஊர­டங்கை நீட்­டித்து முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

கிருமி பாதிப்பு குறை­வாக உள்ள 27 மாவட்­டங்களில் முடி­வெட்­டும் கடை­கள், அழகு நிலை­யங்­கள் உள்­ளிட்ட பல கடை­க­ளும் செயல் படுவதற்கு அனு­மதி அளித்­துள்ள தமி­ழக அரசு, தேநீர் கடை­யைத் திறப்­பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

ஆனால், காலை 10 முதல் மாலை 5 மணிவரை மதுக்­க­டை யைத் திறக்க அனு­மதித்துள்ளது.

இதை­ய­டுத்து, அர­சி­யல் தலை­வர்­கள் பல­ரும் மது­பா­னக் கடை­யைத் திறப்­ப­தற்கு கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

"ஒவ்­வொரு நாளும் கொரோனா கிருமித்தொற்றால் ஆயி­ரக்­க­ணக்­கானோர் பாதிக்கப்படுகின்றனர். இறப்பும் நூற்­றுக்­க­ணக்­கில் பதிவா கிறது. இந்தச் சூழ­லில் மதுக்கடை­களைத் திறப்­பது அவ­சி­யமா," என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜக சட்­ட­மன்ற உறுப்­பி­னர் வானதி சீனி­வா­சன், முதல்வருக்கு கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார். இதுதான் உங்­கள் விடி­யலா? என்றும் அவர் கேள்வி எழுப்பி­யுள்­ளார்.

"ஊட­ரங்கு காலத்­தில் மதுக்­கடை­களைத் திறக்­கக்­கூ­டாது. மதுக்­கடை திறப்பு என்பது மக்­கள் நல­னுக்கு எதி­ரான நட­வ­டிக்கை. இது கடு­மை­யாக கண்­டிக்­கத்­தக்­கது," என பாமக நிறு­வ­னர் மருத்­து­வர் ராம­தாஸ் குறிப்­பிட்­டுள்­ளார்.

எதிர்­க்கட்சித் தலை­வ­ராக இருந்தபோது, தமி­ழ­கத்­தில் மதுக் கடை­களை மூடவேண்­டும் என அப்­போ­தைய அதி­முக அரசை எதிர்த்து ஆர்ப்­பாட்­டம் செய்த ஸ்டா­லின், தற்­போது மதுக்கடை­களைத் திறக்க அனு­மதி அளித்­துள்­ள­தாக தமி­ழக பாஜக தலை­வர் எல்.முரு­கன் விமர்சித்துள்ளார்.

"கொரோனா தொற்று இல்­லா­மல் மக்­கள் இயல்பு நிலைக்குத் திரும்­பும் வரை மதுக்கடையைத் திறக்கக்கூடாது," என ஜி.கே.வாசன் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

கோவில்­கள், வழி­பாட்­டுத் தலங்­களில் பொதுமக்­களை அனுமதிப்­ப­தற்­கான தடை தொட­ர்­கிறது. பொதுப்­ போக்­கு­வ­ரத்­தும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. ஓட்­டல்­களில் 'பார்­சல்' சேவை தொடர்ந்தாலும் தேநீர் கடை­யைத் திறப்­ப­தற்கு அனு­மதி இல்லை.

"உயி­ருக்கு ஆபத்தை விளை­விக்­கும் மதுக்­க­டை­களைத் திறக்க அனு­ம­தித்த அரசு, உட­லுக்கு புத்­து­ணர்ச்­சி­யூட்டும் தேநீர் கடை­யைத் திறப்­ப­தற்கு அனு­ம­திக்­கா­தது ஏமாற்­றம் தரு­கிறது," என தேநீர் பிரி­யர்­கள் கூறியுள்ளனர்.