காலுடைந்த குட்டிக்கு வண்டி செய்து பராமரிக்கும் இளைஞர்

கும்பகோணம்: கும்பகோணத்தைச் சேர்ந்த சைமன் என்ற இைளஞரின் ஆட்டுக்குட்டி, விபத்தில் பின்னங் கால்கள் உடைந்த நிலையில் நடக்க முடியாமல் பெரும் வேதனைப்பட்டு வந்தது.

அதற்கு, ரூ.1,000 செலவில் பிளாஸ்டிக் தண்ணீர் குழாய்கள் மூலம் வண்டி ஒன்றைத் தயாரித்து, அதன்மூலம் அதை புல் மேய வைத்து, ஒரு குழந்தையைப் போல் பெரும் சிரத்தையுடன் பராமரித்து வருகிறார் சைமன். இவரது இந்த மனித நேயத்தை பலரும் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.

"பி.சி.ஏ. படித்துள்ள நான் எனது பகுதியில் உள்ள ஏழை மாண வர்களுக்கு இலவசமாக பாடம் சொல்லிக்கொடுத்து வருகிறேன்.

"ஆடு, மாடு, நாய், முயல் போன்ற செல்லப்பிராணிகளையும் வளர்த்து வருகிறேன். அண்மையில், எனது குட்டி ஆடு ஒன்று இருசக்கர வாகனத்தில் அடிபட்டு கத்தியது. அதன் கால் எலும்பு உடைந்துவிட்ட தால் இனி நடப்பதற்கு வாய்ப்பில்லை என மருத்துவர் கூறினார்.

"இதைத்தொடர்ந்து, ரூ.1,000 செலவில் எனது நண்பரின் உதவி யுடன் பிளாஸ்டிக் குழாய் மூலம் ஆட்டுக்குட்டிக்கு வண்டி தயாரித்தேன். அதில் ஆட்டுக்குட்டி யைத் தூக்கி முன் கால்கள் மட்டும் தரையில் படுவது போல் வைத்து விட்டால் போதும். அது மெல்ல வண்டியை இழுத்துக்கொண்டு நடந்து சென்று புல் போன்ற தீவனத்தை மேய்கிறது.

"அதோடு இரவு தூங்கும்போது அதனால் தரையில் படுக்கமுடியாது என்பதால் தொட்டில் கட்டி அதன் கால்கள் தரையில் படுவது போலவும் உடம்புப் பகுதி தொட்டிக்குள் இருப்பது போலவும் படுக்கவைக்கி றேன். உயிரோடு, உறவோடு கலந்த எந்த உயிரையும் தவிக்கவிடக் கூடாது என குறிக்கோள் உள்ளவன் நான்," என்கிறார் சைமன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!