தாதிகளுக்கு மலர் தூவி நன்றி கூறிய வழக்கறிஞர்

தாதிகளுக்கு மலர் தூவி நன்றி கூறிய வழக்கறிஞர்

1 mins read
a6d01f6b-8ed8-4f45-bd83-4ee5fe9a31da
கிருமி பாதிப்பில் இருந்து குணமடைந்த வழக்கறிஞர் தாதிகள் காலில் மல்லிைகப்பூக்களைத் தூவி நன்றி தெரிவித்தார். படம்: தமிழக ஊடகம் -

புதுக்­கோட்டை: கொரோனா கிருமி பாதிப்­பில் இருந்து குண­மடைந்த வழக்­க­றி­ஞர் ஒரு­வர், தான் வீட்­டுக்­குச் செல்­லும் முன்பு, தன்னை நல்லமுறை­யில் கவ­னித்­துக்­கொண்ட தாதி­களின் பாதங்­களில் மல்லிகைப் பூக்­க­ளைத் தூவி, கையெ­டுத்து கும்­பிட்டு நன்றி செலுத்­தி­னார்.

புதுக்­கோட்டை மாவட்­டம், அறந்­தாங்­கி­யைச் சேர்ந்த மணி மாறன், 50, என்ற வழக்கறிஞர், நுரை­யீ­ரல் தொற்று கார­ண­மாக அறந்­தாங்கி அரசு மருத்­து­வ­மனை­யில் உள்ள கொரோனா வார்­டில் கடந்த சில நாட்­க­ளாக சிகிச்சை ெபற்று வந்­தார்.

ஆரம்பக் கட்டத்தில் இரும லுடன் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்ட இவர் தொடர் சிகிச்சையால் முழுமையாகக் குணமடைந்தார்.

"உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் உங்களைப் போன்ற முன்களப் பணியாளர்களின் சேவை அளப்பரியது. என்னை எந்த அள­விற்கு கவ­னித்­துக்­கொண்­டீர்­களோ அதே­போல் இங்கு வரும் அனைத்து நோயாளி­க­ளை­யும் கவ­னித்­துக்கொள்­ளுங்­கள்," என்று மணி­மா­றன் தாதிகளிடம் வேண்டு­கோள் விடுத்­து­விட்டு வீட்­டுக்கு புறப்­பட்­டுச் சென்­றார்.