உடையும் அபாயத்தில் அதிமுக கூட்டணி; அன்புமணி விமர்சனத்துக்கு புகழேந்தி பதிலடி

உடையும் அபாயத்தில் அதிமுக கூட்டணி; அன்புமணி விமர்சனத்துக்கு புகழேந்தி பதிலடி

2 mins read
979667df-285d-43ad-85f0-75579d877950
செய்தியாளர்களிடம் பேசும் புகழேந்தி. படம்: ஊடகம் -

சென்னை: சட்­ட­மன்­றத் தேர்­தல் முடி­வ­டைந்த ஒன்­றரை மாதங்­க­ளி­லேயே அதி­முக-பாமக கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்கு இடையே கருத்து மோதல்­கள் பகி­ரங்­க­மாக வெடித்­துள்­ளன. இதன் கார­ண­மாக இக் கட்­சி­க­ளின் பிணைப்பு உடை­யும் அபா­யத்­தில் இருப்­ப­தாக அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

இதனால், அடுத்­த­டுத்து நடை­பெ­றும் உள்­ளாட்சி உள்­ளிட்­ட ­தேர்­தல்­களிலும் இக்கூட்­டணி நீடிக்­குமா என்­பது சந்­தே­கமே என்கின்­ற­னர் மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர்­கள்.

தேர்­த­லில் பாமக ஐந்து இடங்­களில் மட்­டுமே வெற்றி­பெற்ற நிலை­யில், இதுதான் பாம­க­வின் செல்­வாக்கு என்று விமர்சிக்கப்பட்டது.

எனி­னும், பாமக மீது அதி­முக தரப்­பு எந்த ஒரு பெரிய விமர்­சனத்தையும் வைக்­கவில்லை.

இந்­நி­லை­யில், பாம­க­வின் இளை­ஞ­ர­ணித் தலை­வ­ரும் ராஜ்­ய­சபா எம்­பி­யு­மான அன்­பு­மணி ராம­தாஸ், "பாமக இல்­லை­யெ­னில் 20 இடங்­க­ளில்­தான் அதி­முக வெற்றி பெற்று இருக்­கும்," என விமர்­சித்­துள்­ளார்.

இது அதி­மு­க­வில் பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­ய­தைத் தொடர்ந்து, அதி­முக செய்­தித் தொடர்­பா­ளர் புக­ழேந்தி அன்­பு­மணியைச் சாடி­யுள்­ளார்.

"ஆறு தொகு­தி­க­ளில் மட்டுமே ­செல்­வாக்குள்ள நிலையில், பாமக இல்லை என்­றால் அதி­முக அதிக இடங்களில் வெற்­றி­பெற்று இருக் காது என சொல்­வது சரியல்ல.

"ஓபி­எஸ் கையெ­ழுத்துப் போட்­ட­தால்­தான் அன்­பு­மணி, மாநி­லங்­க­ளவை எம்.பி. ஆனார் என்­பதை மறக்­க­லாமா?" எனக் கேட்­டுள்­ளார்.

சென்னை மீனம்­பாக்­கம் விமான நிலை­யத்­தில் செய்தியாளர்­க­ளி­டம் புக­ழேந்தி பேசி­ய­போது, "முத­லில் தாங்­கள் போட்­டி­யிட்ட 23ல் 18 தொகு­தி­களில் தோல்வியடைந்தது பற்றி பாமக சிந்திக்கவேண்­டும்.

"பாம­க­வின் தேர்­தல் நிலைப் பாட்­டில் நாங்­கள் தலை­யிட விரும்ப வில்லை. அதே­போல், அதி­முக தலை­வர்­கள் பற்றி அவர்­கள் பேசு­வ­தும் முறையல்ல.

"பாம­க­வால் எந்த வகை­யி­லும் எந்த உத­வி­யும் இல்லை என்­பதை அவர்­கள் உண­ர­வேண்­டும்.

"ஒரு கூட்­ட­ணி­யில் சேரு­வது, பின்­னர் வெளி­யே­று­வது, எங்­க­ளால்­தான் எல்­லாமே நடந்­தது என்று கூறு­வது பாமகவின் வழக்­கம். பாஜக, பாம­க­வு­டன் கூட்­டணி அமைத்­த­தால்­தான் தோற்­றோம் என்று அதி­முக தலை­வர்­களோ, நிர்­வா­கி­களோ பேசவே இல்லை. தோல்­வியை ஒப்­புக்­கொண்­டோம்.

"ஓபி­எஸ் குறித்து தவ­றா­கப் பேசு­வதை நாங்­கள் வேடிக்­கை பார்ப்­போம் என்று கரு­தி­னால், அது­முட்­டாள்­த­ன­மா­னது. பாமக போன்ற சிறிய கட்சி, அதி­மு­கவை கிண்­டல் செய்­வதை எப்­படி வேடிக்­கை பார்க்க முடி­யும்?" என்று புக­ழேந்தி வினவியுள்ளார்.