சசிகலாவுடன் பேசிய 15 பேர் கட்சியை விட்டு அதிரடி நீக்கம்

1 mins read
7210c07a-0bc1-4821-b7ff-2879ddb12864
-

சென்னை: சசி­க­லா­வு­டன் தொலை­பே­சி­யில் உரை­யா­டியவர்­களை உட­ன­டி­யாக கட்­சியை விட்டு நீக்க வேண்­டும் என்று அதி­முக கூட்­டத்­தில் முடிவு எடுக்­கப்பட்டு 15 பேர் நீக்­கப்­பட்டு உள்­ள­னர்.

இவர்­களில், கள்­ளக்­கு­றிச்சி எம்.ஆனந்­தன், ஈரோடு வி.கே.சின்­னச்­சாமி உள்­ளிட்ட 15 நிர்­வா­கி­களும் அடங்­கு­வர்.

சசி­க­லா­வு­டன் இனி உரை­யாடு ­ப­வர்­க­ளை­யும் உட­ன­டி­யாக நீக்­க­வேண்­டும் என்­றும் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

அதி­முக எம்­எல்­ஏக்­கள் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தில், தேர்­த­லுக்கு முன்­பாக அர­சி­ய­லில் இருந்து ஒதுங்கி இருக்­கப்­போ­வ­தாக அறி­வித்த சசி­கலா, அதி­மு­கவை அப­கரிக்­கும் முயற்­சி­யில் இறங்­கப்­போ­வ­தாக ஒவ்­வொரு நாளும் தொலைபேசி­யில் சில­ரு­டன் பேசு­வ­தும் அதை தொலைக்­காட்­சி­களில் ஒளி­ப­ரப்­பு­வ­து­மாக இருந்து வரு­வ­தா­க­வும் தீர்­மா­னத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பதே சசிகலாவின் ஆசை. அதற்காகவே கடந்த மூன்று மாத காலமாக காய் நகர்த்தி வந்த அவர், ஒலிப்பதிவு ஆடியோவை வெளியிடுவதன் மூலம் தனது சதுரங்க விளையாட்டை ஆரம்பித்து உள்ளதாக ஜெயக்குமார் உள்ளிட் டோர் விமர்சனம் செய்தனர்.