சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வருவதுடன் உயிரிழப்பும் குறைந்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 14,016 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
அதேபோல் உயிரிழப்பு ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், நேற்று 267 ஆக குறைந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"தமிழகத்தில் நேற்று புதிதாக 168,663 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
"இவர்களில் மொத்தம் 14,016 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவ்வகையில் தமிழகத்தில் இதுவரை 29 ஆயிரத்து 547 பேர் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

