தளர்வுடன் கூடிய ஊரடங்கு; இயல்பு நிலைக்குத் திரும்பும் தமிழகம் மக்கள் பூங்காக்களில் உற்சாக நடைபயிற்சி

தளர்வுடன் கூடிய ஊரடங்கு; இயல்பு நிலைக்குத் திரும்பும் தமிழகம் மக்கள் பூங்காக்களில் உற்சாக நடைபயிற்சி

2 mins read
d752f422-a4a5-4062-aa47-0f1a98451073
காலை வேளையில் பூங்காக்களில் மக்கள் அதிக ஆர்வத்துடன் நடைபயிற்சியில் ஈடுபடுவதைக் காணமுடிந்தது. இருப்பினும் முன்புபோல் அதிகளவில் மக்கள் கூட்டம் வரவில்லை. கிருமித் தொற்று பயத்தால் வழக்கத்தைவிட பாதிக்கும் குறைவான அளவிலேயே மக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். படம்: ஊடகம் -

சென்னை: சென்னை உள்­ளிட்ட தமி­ழ­கத்­தின் 27 மாவட்­டங்­களில் நேற்று காலை­ முதல் தளர்­வுடன் கூடிய ஊர­டங்கு அம­லுக்கு வந்­தது. இதன் கார­ண­மாக, மக்களின் இயல்பு வாழ்க்கை வழக்க நிலைக் குத் திரும்பத் தொடங்­கியுள்­ளது.

தேநீர் கடைகள், முடிவெட்டும் கடைகள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட கடைகளைத் திறக்கவும் பூங்காக்களில் நடைப்­ப­யிற்சி செல்ல வும் அரசு அனுமதித்துள்ளது.

ஒன்­றரை மாதத்­துக்­குப் பின்­னர் நடைப்­ப­யிற்சி செல்வதற்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஆங் காங்கே உள்ள பூங்­காக்­களில் மக்­கள் ஆர்வத்துடன் நடைப்­ப­யிற்சி யில் ஈடுபட்டனர். ­

அரசுப் பூங்­காக்­கள், விளை­யாட்டுத் திடல்­களில் காலை 6 முதல் 9 மணி வரை மூன்று மணி நேரத்துக்கு மட்டுமே நடைப்­ப­யிற்சி செல்ல அனு­ம­திக்­கப்பட்­டுள்­ளது.

அதே­போல் பள்ளி, கல்­லூ­ரி­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­களில் மாண­வர்­கள் சேர்க்­கை­க்கான பணிகளுக்­கும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அழ­கு­நி­லை­யங்­கள், முடிவெட்டும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்­பட அனு­ம­திக்­கப்பட்டது.

27 மாவட்­டங்­களில் தேநீர் வாங்­கிச்செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தால் நேற்று காலை 6 மணிக்கு தேநீர் கடை­கள் திறக்­கப்­பட்டு வியா­பா­ரம் பரபரப்பாக நடந்தது.

11 மாவட்­டங்­களைப் பொறுத்­த­ள­வில் வீட்டுப் பரா­ம­ரிப்பு சேவை­களை மேற்­கொள்ளவும் மிதி­வண்டி, இரு சக்­கர வாக­னங்­களைப் பழுது நீக்­கும் கடை­கள் செயல்­படவும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் கிருமி பாதிப்பு குறை­யத் தொடங்­கி­யுள்­ள நிலையில், நேற்று முதல் வரும் 21ஆம் தேதி வரை ஒரு வார காலத்­திற்கு தளர்­வு­டன் கூடிய ஊர­டங்கு அம­லுக்கு வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, கோவை, நீல­கிரி, திருப்­பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்­கல், தஞ்­சா­வூர், திரு­வா­ரூர், நாகப்­பட்­டி­னம், மயி­லா­டு­துறை ஆகிய 11 மாவட்­டங்­களில் சற்று குறைவான தளர்­வு­களும் சென்னை உள்­ளிட்ட 27 மாவட்­டங்­களில் இன்­னும் சற்று கூடுதலான தளர்­வு­களும் அமல் படுத்தப்பட்டுள்ளன.