தொற்றால் பாதிக்கப்படாத 355 பேருக்கு கறுப்புப் பூஞ்சை

தொற்றால் பாதிக்கப்படாத 355 பேருக்கு கறுப்புப் பூஞ்சை

1 mins read
c403c506-7418-4807-93a1-17270a1469b4
-

சென்னை: மாநிலத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படாத 355 பேருக்கு கறுப்புப் பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 1,348 போ் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனா். அவா்களில் 355 போ் தொற்று காரணமாகப் பாதிக்கப்படாத வர்கள். கிருமித் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முழுவதும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் 49,000 படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவித்தார்.