கோவை: கோவை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் சம்பள உயர்வு கோரி அமைதியான முறையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"நெருக்கடியான இந்த கொரோனா காலகட்டத்திலும் 365 நாள்களும் மருத்துவப் பணிகளில் ஈடுபடுகிறோம். ஆனால், அதற்கு உண்டான சம்பளம் எங்களுக்குக் கிடைப்பதில்லை. எங்களது பிரச் சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம்," என்று அவர்கள் கூறினர்.
மருத்துவமனை வளாகத்தில் கறுப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்தியவர்கள் செய்தியாளர் களிடம் ேபசினர்.
"இந்தியாவிலேயே தமிழகத்தில் மருத்துவமும் அதைச் சார்ந்த விஷயங்களும் மிகவும் சிறப்பான முறையில் கையாளப்பட்டு வருகின்றன. ஆனால், அதேவேளையில் தமிழக மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறைவாக உள்ளது. இதை ஆண்டுதோறும் அதிகரித்து தரவேண்டும்," என்று கோரினர்.
"அரசு உதவி பெறும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ரூ.70,000 வரை மாத சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்களுக்கு அதில் பாதி கூட கிடைப்பதில்லை," என்றும் கூறிய அவர்கள், "மருத்துவப் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு ரூ.20,000 தான் வழங்கப்படுகிறது. இதனை ரூ.30,000 ஆக வழங்கவேண்டும்," என கேட்டுக்கொண்டனர்.
அதேபோல், மாத உதவித் தொகையையும் அதிகரிக்க வேண்டும் என கோரிய பயிற்சி மருத்துவர்கள், நாட்டிலேயே தமிழகத்தில்தான் குறைவாக சம்பளம் தரப்படுவதாகவும் இதனை ஆண்டுதோறும் 10% அதிகரித்து தர வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

