அமைச்சர்: மூன்றாவது கிருமி அலையையும் சமாளிப்போம்

அமைச்சர்: மூன்றாவது கிருமி அலையையும் சமாளிப்போம்

1 mins read
214db066-44ff-4aea-92b8-f3fdc3bc8e3b
-

சென்னை: கொரோனா மூன்­றா­வது அலையைச் சமா­ளிக்­கும் கட்­ட­மைப்பு தமி­ழ­கத்­தில் உள்­ளது என சுகா­தார அமைச்­சர் சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் கோவை, பொன்­னேரி உள்­ளிட்ட ஐந்து இடங்­களில் நிரந்­தர உயிர்­வாயு உற்­பத்தி நிலை­யங்­களை அமைக்க அரசு முடிவு செய்­துள்­ள­தாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

"கொரோனா மூன்­றா­வது அலையை எதிர்­கொள்ள அனைத்து அரசு மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் குழந்­தை­க­ளுக்­கான சிறப்­புப் பிரிவுகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

"மாநி­லத்­தில் இது­வரை 1,737 பேர் கறுப்­புப் பூஞ்சை நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­நோய்க்­குச் சிகிச்சை அளிக்­க­வும் சிறப்­புப் பிரி­வு­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன," என்­றார் அமைச்­சர் மா சுப்­பி­ர­ம­ணி­யன்.

கொரோனா பாதிப்­பால் இறந்த அனை­வ­ருக்­கும் நிதி உதவி வழங்­கப்­ப­ட­வில்லை என்று குறிப்­பிட்ட அவர், கொரோ­னா­வால் பெற்­றோரை இழந்த ஆத­ர­வற்ற குழந்­தைக்கு மட்­டுமே நிதி உதவி வழங்­கப்­ப­டு­வ­தாக தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, கோவை மாவட்­டத்­தில் அன்­றாட கொரோனா பரி­சோ­தனை எண்­ணிக்கை குறைக்­கப்­பட்­டுள்­ள­தாக எழுந்­துள்ள புகாரை அம்­மா­வட்ட ஆட்­சி­யர் திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளார்.