‘எந்த அச்சுறுத்தலுக்கும் அதிமுக அஞ்சாது’

சென்னை: கடந்த பத்தாண்டு காலமாக ஏற்படாத மின் வெட்டுப் பிரச்சினை இப்போதைய திமுக ஆட்சியில் மக்களைப் பாடாய்ப் படுத்தி ைவப்பதாகவும் ஆனால், எந்த அச்சறுத்தலாலும் அதி முகவை அைசக்க முடியாது என்றும் அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கி ணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவர்களது அறிக்கையில், "ஊதி விளையாடுவதற்கு அதிமுக என்பது புது வெள்ளத்தில் மிதந்து வரும் நுரைப் பூ அல்ல. எந்த அச்சுறுத்தலும் எங்கள் இயக்கத்தை நெருங்கமுடியாது. அதிமுகவின் தகவல் தொழில் நுட்பப் பிரிவினர் மீதான தாக்கு தலை ஏவி விடுவதில் திமுகவினர் தீவிரமாக உள்ளனர். வாக்களித்த மக்களுக்குச் செய்யவேண்டிய கடமை திமுகவுக்கு இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

"இப்போது மாநிலம் முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது. ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே முடிந்த நிலையில் வாக்களித்த மக்களை திமுக வஞ்சித்து வருகிறது," என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, நாளை முதல் அடுத்த 10 நாள்களுக்கு மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள் ளப்பட உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!