ரூ.40 கடனுக்காக இளையர் கொலை; நண்பர் கைது

ரூ.40 கடனுக்காக இளையர் கொலை; நண்பர் கைது

1 mins read
e2bb0ee5-1c8a-4df1-a08b-3eed6ba032f3
-

மாத­வ­ரம்: மாத­வ­ரத்­தில் உயிர் நண்­பர்­கள் இரு­வர் 40 ரூபாய் கட­னுக்­காக ஒரு­வ­ருக்கு ஒரு­வர் வாக்­கு­வா­தம் செய்து சண்டை போட்­டுள்­ள­னர். இந்த சண்டை முற்­றி­ய­தில் இளை­யர் ஒரு­வர் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார். கொலையைச் செய்­த­வர் கைதாகி உள்­ளார்.

சென்­னையை அடுத்த மாத­வ­ரம் உடை­யார் தோட்­டம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் மணி என்ற மணிகண்­டன், 25. இவர், மாத­வ­ரத்­தில் உள்ள தனி­யார் பட்­ட­றை­யில் வேலை செய்து வந்­தார்.

அதே பகு­தி­யைச் சேர்ந்த இவ­ரு­டைய நண்­பர் நாக­முத்து, 26. இவர்­கள் இரு­வ­ரும் தங்­க­ளது இதர நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை மது அருந்­தி­னர்.

மாலை­யில் நண்­பர்­கள் அனை வரும் சென்­று­விட மணி­கண்­டன், நாக­முத்து இரு­வர் மட்­டும் உடை­யார் தோட்­டம் 3வது தெரு­வில் அமர்ந்து பேசிக்­கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது நாக­முத்து, மணி கண்­ட­னி­டம் தனக்குத் தர­வேண்­டிய ரூ.40 கட­னைத் திருப்­பிக் கேட்­டுள்­ளார். இத­னால் நண்­பர்­கள் இரு­வ­ருக்கும் இடையே வாக்­கு­வா­தம் முற்றி, ஒரு­வரை ஒரு­வர் தாக்­கிக்கொண்­ட­னர். இதில் ஆத்­தி­ர­ம் அடைந்த நாக­முத்து, அங்­கி­ருந்த இறைச்­சிக் கடை­யில் இருந்த கத்­தியை எடுத்து மணி­கண்­டனைத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.