மதனுக்கு விரித்த வலையில் மனைவி கிருத்திகா சிக்கினார்

மதனுக்கு விரித்த வலையில் மனைவி கிருத்திகா சிக்கினார்

2 mins read
d2355813-0c66-4d67-908b-a192a5590eb8
கைதான மதனின் மனைவி கார்த்திகா, 'யூடி­யூப்' பிர­ப­லம் மதன்.படங்கள்: தமிழக ஊடகம் -

சேலம்: 'யுடி­யூப்' மூலம் பிர­ப­லம் அடைந்த மதன் என்ற இளை­யரை போலி­சார் தொடர்ந்து தேடி வரும் நிலை­யில், இந்த வழக்­கில் ஒரு புது திருப்­ப­மாக அவ­ரது மனை­வி­யும் 'யுடி­யூப்' நிர்­வாகியுமான கிருத்­தி­காவை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு காவல்துறை­யி­னர் கைது செய்துள்ளனர்.

'யுடி­யூப்' காணொளியில் மத­னு­டன் அசிங்க அசிங்­க­மாக கெட்ட வார்த்­தை­களைப் பேசி இளை­யர்களைக் கட்­டிப்­போட்­டது இந்த கிருத்திகாதான் என்­ப­தும் இந்­தக் காெணாளி­கள் மூலம் மாதம்­தோ­றும் ரூ.7 லட்­சம் வரை மதன் சம்­பா­தித்து வந்­தார் எனவும் தெரி­ய­வந்­துள்­ளது.

கைதான கிருத்­தி­காவை காவல்­து­றை­யி­னர் சென்னை எழும்­பூர் குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தி­னர். அவரை ஜூன் 30ஆம் தேதி­வரை சிறை­யில் அடைக்க நீதி­பதி உத்­தரவிட்­டார்.

சேலத்­தைச் சேர்ந்த மதன், இணைய விளை­யாட்­டு­களை எப்­படி ஆட­வேண்­டும் என்று கற்­றுக் கொடுப்­ப­தா­கக் கூறி ஏரா­ள­மான சிறு­மி­ய­ரு­டன் ஆபா­ச­மா­கப் பேசி வந்­துள்­ளார். மேலும் சில­ரி­டம் பணம் பறித்து மோசடி செய்­த­தா­க­வும் புகார் எழுந்­துள்­ளது.

இப்­படி 'யுடி­யூப்' மூலம் சம்­பா­தித்த பணத்தை பங்கு வர்த்­த­கம், 'பிட்­காய்ன்' போன்­ற­வற்­றில் மதன் முத­லீடு செய்­துள்­ள­தா­க­வும் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

மத­னின் குடும்­பத்­தி­ன­ரைச் சுற்றி போலி­சா­ரின் வலை இறுகி யுள்ள நிலை­யில், மதன் சர­ண­டைய இருப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், அவ­ரைத் தேடும் பணி தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சென்னை காவல் ஆணை­யர் சங்­கர் ஜிவால் தெரி­வித்­துள்­ளார்.

இதற்கிடையே, முன் பிணை கேட்டு மத­னின் வழக்­க­றி­ஞர் நீதி­மன்­றத்­தில் மனுத்தாக்­கல் செய்­துள்ள நிலை­யில், மத­னின் 'யுடியூப்' காணொ­ளி­க­ளைப் பின்­தொ­டர்­வோ­ரில் 30% பள்ளி மாண­வர்­கள் என காவல்­துறை நீதி­மன்­றத்­தில் தக­வல் தெரி­வித்­தது.

இதைத்தொடர்ந்து, "மதன் பேசி யதைக் காதுகொடுத்து கேட்க முடி­ய­வில்லை. குழந்­தை­க­ளைக் கெடுக்­கும் வகை­யி­லும் பெண்­க­ளைக் கேவ­லப்­ப­டுத்­தும் வகை­யிலும் அவர் பேசி­யுள்­ளார். மத­னின் பேச்சை நீங்­கள் காது கொடுத்து கேட்­டுள்­ளீர்­களா?'' எனக் கேட்ட நீதி­ப­தி­கள், மத­னின் பேச்­சைக் கேட்­டு­விட்டு இன்று 18ஆம் தேதி விசாரணைக்கு வரு­மாறு வழக்­க­றி­ஞ­ருக்கு அறி­வு­றுத்­தி­னர்.