சென்னை: பாலியல் புகார் தொடர்பில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவுக்குச் சொந்தமான சுஷில்ஹரி அனைத்துலகப் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக் குழு தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் காசியாபாத்தில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலிசார் கைது செய்தனர்.
அதன்பின்னர், டெல்லி நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்தி, நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னை எழும்பூர் அலுவலகத்தில் வைத்து சிவசங்கரிடம் விசாரணை செய்த சிபிசிஐடி போலிசார், ேநற்று செங்கல்பட்டில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நீதிபதி முன்பு அவரை முன்னிலைப்படுத் தினர்.
இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்படும் சிவசங்கரை காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலிசார் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி அனைத்துலகப் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார்.
இங்குள்ள விடுதியில் தங்கிப் படித்து வரும் மாணவிகளுக்கு சிவசங்கர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன.
இதற்கிடையே, மாரடைப்பு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் மருத்துவமனையில் சிவசங்கர் பாபாவுக்கு 'ஆஞ்சியோ பிளாஸ்டி' சிகிச்சை வழங்கப்பட்டதை போலிசார் உறுதிப்படுத்தினர்.
அதேவேளையில், சுஷில்ஹரி பள்ளியில் படித்து வந்த 50% மாண வர்கள் பள்ளியை விட்டுச் சென்று விட்டனர். பத்து ஆசிரியர்களும் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அப்பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழை உடனே வழங்கவேண்டும். வெளியேறும் மாணவர்கள் வேறு பள்ளியில் சேர தமிழக அரசு உதவிட வேண்டும்.
இப்பள்ளியின் அங்கீகாரத்தை மாநில கல்வித்துறை ரத்து செய்ய வேண்டும் அல்லது இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் பரிந்துரைத்துள்ளது.
அதேசமயம், பள்ளியில் நடத்திய சோதனையில் சிக்கிய மடிக்கணினி யில் சிவசங்கர் பாபா மாணவிகள், தொழிலதிபர்கள் மனைவிகளுடன் ஆனந்த நடனம் ஆடும் காெணாளிகளும் மாணவிகள் சிவசங்கர் பாபாவின் உடலைப் பிடித்துவிடும் காணொளிகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.