சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் முன்னிலை; சிபிசிஐடி போலிசார் காவலில் எடுக்க திட்டம் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை

சென்னை: பாலி­யல் புகார் தொடர்பில் கைதாகி­யுள்ள சிவ­சங்­கர் பாபா­வுக்­குச் சொந்­த­மான சுஷில்­ஹரி அனைத்­து­ல­கப் பள்­ளி­யின் அங்­கீ­கா­ரத்தை ரத்து செய்ய வேண்­டும் என்று காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு மாவட்ட குழந்­தை­கள் நலக் குழு தமிழக அர­சுக்குப் பரிந்­துரை செய்­துள்­ளது.

பாலி­யல் குற்­றச்­சாட்டு தொடர்­பில் காசி­யா­பாத்­தில் சிவ­சங்­கர் பாபாவை சிபி­சி­ஐடி போலி­சார் கைது செய்தனர்.

அதன்பின்னர், டெல்லி நீதி­மன்­றத்­தில் அவரை முன்­னி­லைப்­படுத்தி, நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு நேரத்­தில் விமா­னம் மூலம் சென்­னைக்கு அழைத்து வந்­த­னர்.

சென்னை எழும்­பூர் அலு­வ­ல­கத்­தில் வைத்து சிவ­சங்கரிடம் விசா­ரணை செய்த சிபி­சி­ஐடி போலிசார், ேநற்று செங்கல்பட்டில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நீதிபதி முன்பு அவரை முன்னிலைப்படுத் தினர்.

இதைத்தொடர்ந்து சிறை­யில் அடைக்கப்படும் சிவசங்கரை காவ­லில் எடுத்து விசா­ரிக்கவும் சிபி­சி­ஐடி போலி­சார் திட்­ட­மிட்டு இருப்­ப­தாகத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

செங்­கல்­பட்டு மாவட்­டம், கேளம்­பாக்­கத்­தில் உள்ள சுஷில்­ஹரி அனைத்­து­ல­கப் பள்­ளியை சிவ­சங்­கர் பாபா நடத்தி வரு­கி­றார்.

இங்­குள்ள விடு­தி­யில் தங்­கிப் படித்து வரும் மாண­வி­க­ளுக்கு சிவ­சங்­கர் பாலி­யல் தொல்லை கொடுத்­த­தாக புகார்­கள் எழுந்­தன.

இதற்கிடையே, மார­டைப்பு கார­ண­மாக உத்தரகாண்ட் மாநிலம், டேரா­டூன் மருத்­து­வ­ம­னை­யில் சிவ­சங்­கர் பாபாவுக்கு 'ஆஞ்­சியோ பிளாஸ்டி' சிகிச்சை வழங்கப்பட்டதை போலிசார் உறுதிப்படுத்தி­னர்.

அதேவேளையில், சுஷில்­ஹரி பள்­ளி­யில் படித்து வந்த 50% மாண வர்­கள் பள்­ளியை விட்­டுச் சென்று விட்­ட­னர். பத்து ஆசி­ரி­யர்­களும் ராஜி­னாமா செய்­து­விட்­ட­தாக தக­வல்கள் தெரிவித்தன.

மாண­வர்­க­ளின் எதிர்­கா­லத்தை கருத்­தில் கொண்டு அப்­பள்­ளி­யில் இருந்து வெளி­யே­றும் மாண­வர்­க­ளுக்கு மாற்­றுச்­சான்­றி­தழை உடனே வழங்கவேண்­டும். வெளி­யே­றும் மாண­வர்­கள் வேறு பள்­ளி­யில் சேர தமி­ழக அரசு உத­விட வேண்­டும்.

இப்­பள்­ளி­யின் அங்­கீ­கா­ரத்தை மாநில கல்­வித்­துறை ரத்து செய்ய வேண்டும் அல்­லது இப்­பள்­ளியை அரசே ஏற்று நடத்த வேண்­டு­ம் என­வும் செங்­கல்­பட்டு, காஞ்­சி­பு­ரம் மாவட்ட குழந்­தை­கள் நலக்­கு­ழு­மம் பரிந்­து­ரைத்­துள்­ளது.

அதேசமயம், பள்ளியில் நடத்திய சோதனையில் சிக்கிய மடிக்கணினி யில் சிவசங்கர் பாபா மாணவிகள், தொழிலதிபர்கள் மனைவிகளுடன் ஆனந்த நடனம் ஆடும் காெணாளிகளும் மாணவிகள் சிவசங்கர் பாபாவின் உடலைப் பிடித்துவிடும் காணொளிகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!