துபாயில் தொற்றால் தாய் மரணம்; 11 மாத குழந்தை மீட்டு வரப்பட்டது

திருச்சி: துபாய்க்கு வேலைக்­குச் சென்ற பெண் கொவிட்-19 தொற்­றால் இறந்­து­விட, ரத்த சொந்­தங்­கள் எவ­ரு­மின்றி இரு வாரங்­க­ளா­கத் தவித்து வந்த 11 மாதக் குழந்தை தமி­ழக அர­சின் உத­வி­யால் மீட்டு வரப்­பட்டு, தந்­தை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டான்.

கள்­ளக்­கு­றிச்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் வேல­வன் ராஜா - பாரதி தம்­பதி­யர். நிலத்தை விற்­றுச் செலவு செய்­தும் இவர்­க­ளின் மூத்த மகன் விக்­னேஷ்­வ­ரன், 10, சிறு­நீ­ர­கப் பிரச்­சினை கார­ண­மா­கச் சென்ற ஆண்டு இறந்­து­விட்­டான்.

இதை­ய­டுத்து, நிதிப் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்­காக கைக்­கு­ழந்­தை­யான தமது மூன்றாவது மகன் தேவே­ஷு­டன் கடந்த மார்ச் மாதம் துபாய்க்கு வேலைக்­குச் சென்­றார் பாரதி. 2வது மகன் அகி­லன், 7, தந்­தை­யு­டன் தமி­ழ­கத்­தி­லேயே வசித்து வந்­தான்.

இந்­நி­லை­யில், கடந்த மே 29ஆம் தேதி கொரோனா தொற்­றால் பாரதி இறந்­து­விட, அங்­கேயே அவ­ரது உடல் தக­னம் செய்­யப்­பட்­டது.

இந்­தத் துயர நிகழ்வை அறிந்த முதல்­வர் ஸ்டா­லின், தேவேஷ் தமிழ்­நாடு திரும்­பத் தேவை­யான ஏற்­பா­டு­களை செய்­தார். இதையடுத்து, தாயின் அஸ்தியுடன் நேற்று முன்­தி­னம் தேவேஷ் திருச்சி விமான நிலை­யத்தை வந்­த­டைந்­தான்.

தம் மகன் நாடு திரும்ப உத­வி­ய முதல்­வ­ருக்கு நன்­றி­கூ­றிக்­கொண்ட திரு வேல­வன், "அடுத்து என்ன செய்­வது எனத் தெரி­ய­வில்லை. ஆனாலும், என் பிள்­ளை­களுக்கு நல்ல வாழ்க்­கையை ஏற்­படுத்­தித் தர என்­னா­லான அனைத்­தை­யும் செய்­வேன்," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!